Saturday, March 07, 2015
குட்டப்பாளையம் பகுதியில் வெண்டைக்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் முத்தூர், நத்தக்காடையூர், குட்டப்பாளையம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாய சாகுபடி பணிகள் மிகவும் பிரதான தொழில்களாக செய்யப்பட்டு வருகின்றன. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை இருந்து வருகிறது. இந்த அணையில் இருந்து ஆண்டு தோறும் இரு பிரிவுகளாக திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி இப்பகுதி விவசாயிகள் நஞ்சை சம்பா நெல் மற்றும் எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடி செய்து பலன் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் எண்ணெய்வித்து பயிர் சாகுபடிக்கு முறைத்தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி இப்பகுதி விவசாயிகள் எள், மக்காசோளம், நிலக்கடலை, சூரியகாந்தி ஆகிய பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் குட்டப்பாளையம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கீழ்பவானி பாசன விவசாயிகள் தற்போது எண்ணெய்வித்து பயிர் சாகுபடிக்கு அடுத்த படியாக குறைந்த நீர் நிர்வாகத்தில் அதிக பலன் தரும் வெண்டை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்படி சுற்றுவட்டார விவசாயிகள் தங்களது வயல்களில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவு வரை வெண்டை சாகுபடி செய்துள்ளனர்.
இதன்படி 1 ஏக்கர் வெண்டை சாகுபடி செய்வதற்கு உழவு கூலி, பார்கட்டுதல், அடி உரமிடுதல், விதை ஊன்றுதல், களைஎடுத்தல், உரநிர்வாகம், பயிர் பாதுகாப்பு பேணுதல் என ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை முதலீடு செய்துள்ளனர். இந்த வெண்டை செடிகளில் தற்போது மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்து அயல் மகரந்த சேர்க்கை மூலம் வெண்டை பிஞ்சுகள் உருவாகி வெண்டை காய்களாக காய்த்துள்ளன.
வெண்டை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைந்துள்ள வெண்டை காய்களை அறுவடை செய்து முத்தூர், நத்தக்காடையூர், வெள்ளகோவில், காங்கயம், அரச்சலூர், சிவகிரி, கந்தசாமிபாளையம், ஆகிய பகுதிகளில் செயல்படும் வாரச்சந்தை மற்றும் தினசரி காய்கறி கடைகளுக்கு நேரில் கொண்டு சென்று விற்று பலன் அடைந்து வருகின்றனர். இப்பகுதிகளில் குறுகிய காலத்தில் குறைந்த நீர் நிர்வாகத்தில் அதிக மகசூல் தரும் வெண்டை காய்கள் சாகுபடி விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
0 comments:
Post a Comment