Saturday, March 07, 2015
திருப்பூர், பல்லடம், அவினாசி தாலுகா அலுவலகங்களில் உள்ள பொது இ–சேவை மையங்களில் அமைச்சர் ஆனந்தன் ஆய்வு
திருப்பூர், பல்லடம், அவினாசி தாலுகா அலுவலகங்களில் உள்ள பொது இ–சேவை மையங்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவினாசி, ஊத்துக்குளி, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் ஆகிய 9 தாலுகா அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகிய 10 இடங்களில் பொது இ–சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9 தாலுகா அலுவலகங்களிலும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் இந்த சேவை மையங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவினாசி, ஊத்துக்குளி, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் ஆகிய 9 தாலுகா அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகிய 10 இடங்களில் பொது இ–சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9 தாலுகா அலுவலகங்களிலும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் இந்த சேவை மையங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 24–ந் தேதி முதல் திருப்பூர் மாவட்டத்தில் இந்த சேவை மையங்கள் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் ஆகியவற்றை இந்த மையத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இதுதவிர சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் திருமண நிதி உதவிதிட்டம் தொடர்பான அனைத்து கோரிக்கை மனுக்களும் இங்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அமைச்சர் ஆய்வு
மேலும் மின்கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் பொது சேவை மையம் மூலம் வழங்கப்படுகிறது. அதுபோல் மத்திய அரசின் வருமான வரித்துறையால் வழங்கப்படும் ‘பான்கார்டு’ பெறவும், ஆதார் அட்டை பெறுவதற்கு ஒப்புகை சீட்டு இருந்தால் அதை பயன்படுத்தி ஆதார் அட்டை நகல் எடுத்துக்கொள்வதற்கும் இங்கு விண்ணப்பிக்கலாம். இதுதவிர தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்துகொள்ளவும், பாஸ்போர்ட் பெறுவதற்கும், அதுதொடர்பான காவல்துறையின் சான்றிதழ் பெற விண்ணப்பிப்பதற்கும், ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (எல்.ஐ.சி.) தவணை தொகை செலுத்தவும் இந்த பொது இ–சேவை மையத்தில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு செய்தனர். திருப்பூர் வடக்கு, பல்லடம், அவினாசி ஆகிய தாலுகா அலுவலகங்களில் உள்ள பொது இ–சேவை மையத்துக்கு சென்று அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சான்றிதழ்களை வழங்கினார்.இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மேயர் விசாலாட்சி, மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், எம்.எல்.ஏ.க்கள் பரமசிவம், கருப்பசாமி, துணைமேயர் குணசேகரன், மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், அவினாசி பேரூராட்சி தலைவர் ஜெகதாம்பாள், பல்லடம் நகராட்சி துணைத்தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி, பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சிவாசலம், உகாயனூர் ஊராட்சி தலைவர் யு.எஸ்.பழனிசாமி, பல்லடம் நகர அ.தி.மு.க. செயலாளர் ரத்தினசாமி, ஒன்றிய துணை செயலாளர் சித்துராஜ், தாசில்தார்கள் சிவக்குமார், ரமேஷ், அம்சவேணி, அரசு கேபிள் டி.வி. தாசில்தார் முருகதாஸ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
«.þ.«.¾¢.Ó.¸.¯ñ½¡Å¢Ã¾ô§À¡Ã¡ð¼õ «ì - 5 Á¼òÐìÌÇõ ¾¡æ측 §Å¼ÀðÊ °Ã¡ðº¢ ÁýÈ ¾¨ÄÅ÷ S.§¸¡À¡Ä¸¢Õ‰½ý ¾¨Ä¨Á¢ø ¬Â¢Ãò¾¢üÌõ §ÁüÀ𧼡...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
0 comments:
Post a Comment