Saturday, March 07, 2015

On Saturday, March 07, 2015 by farook press in ,    
ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மூலனூர் பேரூர் இளைஞரணி மற்றும் கன்னிவாடி பேரூர் தி.மு.க. சார்பில் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இனிப்பு, எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.மூலனூர் பேரூர் இளைஞரணி சார்பில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வெங்கு கல்பட்டி கார்த்தி தலைமையில் அண்ணாநகர் ஆரம்ப பள்ளியில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. இதை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வெங்குகல்பட்டி கார்த்தி வழங்கி தொடங்கி வைத்தார். இதில் மூலனூர் பேரூர் செயலாளர் தெண்டபாணி, பேரூர் இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.இதில் ஒன்றிய துணைச்செயலாளர் சண்முகம், மாவட்ட பிரதிநிதி இரா.செந்தில்குமார், வார்டு செயலாளர் சங்கர், பிரதிநிதி விஸ்வநாதன் ஒன்றிய, பேரூர் இளைஞரணியினர் கலந்து கொண்டனர்.
கன்னிவாடி பேரூர் தி.மு.க. சார்பில் பேரூர் அவைத்தலைவர் சீரங்கராயன் தலைமையில் கன்னிவாடி, காதக்கோட்டை, மொங்க நல்லாம்பாளையம், மணலூர், எரச்சப்பாடி, ஒரத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ–மாணவிகளுக்கு சர்க்கரைப்பொங்கல் வழங்கப்பட்டது. கன்னிவாடி பேரூர் செயலாளர் சுரேஷ் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட பிரதிநிதி வடிவேல், பெரியசாமி, பேரூர் இளைஞரணி அமைப்பாளர் கார்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேரூர் துணை அமைப்பாளர் ராமசாமி, ஒன்றிய பிரதிநிதி கிரிகுமார், பேரூராட்சி உறுப்பினர்கள் பெரியசாமி, செல்லமுத்து, குழந்தைவேல், தமிழரசி, சின்னத்துரை, பாலசுப்பிரமணி, சிவகுருபாலன், செண்பகவேல் பூபாலன் மற்றும் பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர் பொன்மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments: