Thursday, March 12, 2015
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்துள்ள பொங்கலூர் ஒன்றியம் கேத்தனூரில் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிகோபால் ஏற்பாட்டின் பேரில் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் 5 ஆயிரம் பேருக்கு சிறப்பு அன்ன தானம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ., வும், ஒன்றிய செயலாளருமான கே.பி.பரமசிவம், பொங்கலூர் ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான எஸ்.சிவாச்சலம் ஆகியோர் தலைமை தங்கினர். பின்னர் அங்குள்ள பெருமாள் கோவிலில் அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலி தா நீடூழி வாழவும், மீண்டும் தமிழக முதல்வராக பெறுப்பெற்கவும் வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் மா நகர் மாவட்ட செயலாளரும்,வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் (அறுசுவை விருந்து) வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், ஒன்றிய குழு துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயச்சுந்தர்,அனந்தகிருஷ்ணன், துணை தலைவர் பொன்னுசாமி, நாச்சிபாளையம் ஊராட்சி தலைவர் அப்புசாமி, திருப்பூர் நிலவள வங்கி தலைவர் புத்தரச்சல் பாபு, துத்தேரிபாளையம் கூட்டு றவு சங்க தலைவர் நாகராஜன்,ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஜோதிமணி, கிளை நிர்வாகிகள் மகேஷ்குமார், சந்தோஷ், ரங்கராஜ் உள்ளிட்டவர்களும், கேத்தனூர் ஊராட்சி அண்ணா தி.மு.க.சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment