Thursday, March 12, 2015

On Thursday, March 12, 2015 by Tamilnewstv in    


வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களையும் பொதுமக்கள் எளிதில் பெற தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் கடந்த 24.02.2015 முதல் பொது சேவை மையங்கள் தொடங்கப்பட்டு குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அரசால் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் நலத்திட்டங்களைப் பெற பொதுமக்கள் பல்வேறு அலுவலகங்களுக்குச் சென்று விண்ணப்பித்து பெறப்பட்டு வந்த நிலையை மாற்றிää எவ்வித சிரமமும் ஏற்படாமல் ஒரே அலுவலகத்தில் விண்ணப்பித்து எளிதில் சான்றிதழ்களைப் பெறும் வகையில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. பொது சேவை மையங்கள் அனைத்து வட்டங்களிலும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரு»றது. இதன் மூலம் பொதுமக்கள் பெறவேண்டிய சான்றிதழ்கள் மற்றும் நலத்திட்டங்கள் நேர்த்தியாகவும்ää வெளிப்படையாகவும் அவர்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கு அரு»லேயே அளிப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 

இச்சேவை மையங்களில் தற்போது முதல் தலைமுறை பட்டதார்p சான்றிதழ்ää வருமானச் சான்றிதழ்ää சாதிச்சான்றிதழ்ää இருப்பிடச் சான்றிதழ்ää விதவைச் சான்றிதழ் ஆகிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  இச்சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் போது அதற்கான கட்டணம் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.  உதாரணமாகää 1. முதல் பட்டதாரி சான்று பெறுவதற்கு குடும்ப அட்டைää பள்ளி மாற்றுச்சான்றிதழ் அல்லது கல்லூரியில் படித்து வருவதற்கான சான்றுää தாய்-தந்தைää அண்ணன்-தம்பிää அக்கா-தங்கை ஆகியோரின் பள்ளிச் சான்றிதழ்களை இணைக்கப்பட வேண்டும்.  2. இருப்பிடச் சான்று பெறுவதற்கு குடும்ப அட்டை  மற்றும் பிறப்பு சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.

மனுதாரர் சான்று கோரி விண்ணப்பிக்கும் போது அசல் ஆவணங்கள் அனைத்தும் கணினியில் ஸ்கேன் செய்யப்பட்டு அதன் பின் விண்ணப்பதாரரின் விபரங்கள் உரிய படிவத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டு மனுதாரரால் சரிபார்க்கப்பட்ட பின்பே மனுவிற்கான எண் (ஊயனெனையவந யுஉஉழரவெ ரேஅடிநச) கணினியில் பதிவு செய்யப்பட்டு மனுதாரருக்கு ஒப்புகை சீட்டு  வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த படிவத்தில் மனுதாரரின் கைப்பேசி எண் பதிவு செய்யப்படும்.  அவ்வாறு மனுதாரருக்கு கைப்பேசி எண் இல்லையெனில் அவரது உறவினர் அல்லது அவரது இருப்பிடத்திற்கு அருகில் உள்ளவரது கைப்பேசி எண் பதிவு செய்யப்படும். மனுதாரர் தான் விண்ணப்பித்த சான்றிதழை பெற்றுக்கொள்ள ஏதுவாக சான்று தயாரானதும் அவரது கைபேசியில் குறுஞ்செய்தி (ளுஆளு) அனுப்பபடும.; அந்தச் செய்தியின் அடிப்படையில் சான்றினை நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.

இச்சேவையைத் தொடர்ந்து சமூக நலத்துறையின் மூலம் வழங்கப்படும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்ää மூவானூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்ää டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவித் திட்டம்ää .வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித் திட்டம்ää டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்ää அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டம் உள்ளிட்ட 38 வகையான மின்னாளுமை அரசு சேவைகள் அதற்கான கட்டணத்துடன் வழங்கப்பட உள்ளது. 

இதனைத் தொடர்ந்துää இந்த பொது சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை செலுத்துவதற்கான வசதியும்ää மத்திய அரசின் வருமான வரித்துறையால் வழங்கப்படும் பான் கார்டு (Pn ஊயசன) என்று அழைக்கப்படும் நிரந்தரக் கணக்கு எண் பெறுவதற்கு விண்ணப்பம் செய்வதற்கும்ää ஆதார் அட்டை பெறுவதற்கு ஒப்புகை சீட்டு இருந்தால் அதைப் பயன்படுத்தி ஆதார் அட்டையின் பிரிண்ட் எடுத்துக் கொள்வதற்கும்ää தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்துகொள்வதற்கும்ää பாஸ்போர்ட் பெற அது தொடர்பான காவல் துறையின் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பம் செய்வதற்கும்ää ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (டுஐஊ) தவணைத் தொகை செலுத்துவதற்கும் இப்பொது சேவை மையங்களில் வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளன.  ஸ்ரீரங்கம் பொதுசேவை மையம் மாநிலத்திலேயே ஒரு மாடல் சேவை மையமாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 comments: