Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். இதனை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை மீட்கும் வரை, பூம்புகார் பகுதி மீனவர்கள் கடந்த 6 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தி.மு.க. நாகை மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஏ.கே.எஸ்.விஜயன் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரைநேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மோகன அன்பழகன், நகர செயலாளர் சுப்புராயன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் தியாக விஜயேஸ்வரன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் ரவி, மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் அம்பலவாணன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சசிக்குமார், துரைராஜன், கட்சிப்பிரமுகர்கள் மாரிமுத்து, குணசேகரன், முல்லைவேந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

0 comments: