Wednesday, September 17, 2014
நாகை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 8½ கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதிகாரிகள் கண்காணிப்பு
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி செல்லப்படுவதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வுதுறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து அதிகாரிகள் தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நேற்று மதியம் அதிகாரிகள் மேலசாலை பகுதியில் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வேகமாக வந்தது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். மேலும் காரில் இருந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
பறிமுதல்
விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அதிகாரிகளுக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. எனவே அதிகாரிகள் காரில் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது காரின் கியர் பாக்ஸ் அடியில் 19 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தங்க கட்டிகளை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவற்றை காரில் இருந்து வெளியே எடுத்து ஆய்வு செய்தனர்.
தங்க கட்டிகளின் மொத்த எடை 8 கிலோ 536 கிராம் என தெரியவந்தது. இதன்மதிப்பு சுமார் ரூ.2 கோடியே 30 லட்சம் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தங்க கட்டிகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கைது
இதைத்தொடர்ந்து காரில் இருந்த 2 பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த முகமது பாசில் (வயது 25) மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த யாசர் அராபத் (20) என்பதும் தெரியவந்தது.
முகமது பாசில், யாசர் அராபத் ஆகிய இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டதா? அல்லது வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டதா? இந்த கடத்தலில் மேலும் யாரும் சம்பந்தப்பட்டுள்ளனரா? என பிடிபட்ட 2 பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
இந்திய தொழில் கூட்டமைப்பின் அங்கமான இந்திய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் இன்றைய பெண்களின் மாறிவரும் பங்கும், பொறுப்புகளும் என்ற தலைப்பில் க...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
0 comments:
Post a Comment