Saturday, October 11, 2014
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் இருந்து பிரிக்கப்படும் பள்ளபாளையம் கிளை வாய்க்கால் மூலம் 554 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.பள்ளபாளையம் கிளை வாய்க்கால் முழுமையும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, பாதை வசதி இல்லாமல் இருந்தது. இதனால் இடது கரையில் கடைமடை பகுதி வரை நீர் நிர்வாகம் செய்யவும் வேளாண் இடுபொருட்களை கொண்டு செல்லவும், விளைபொருட்களை எடுத்து செல்லமுடியாமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டார்கள்.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்ட யு–10 பாசனசபை நிர்வாகிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் விவசாயிகள் தாங்களாகவே முன் வந்தால் பாதை வசதியை ஏற்படுத்தி கொள்ளலாம் என தகவல் தெரிவித்தனர்.
பாசன சபையினரின் முடிவின்படி வாய்க்காலின் அய்யன்வலசு சாலை முதல் கடைமடை பகுதி வரை இடது கரை அருகே நிலத்தில் பயிர்செய்திருந்த மஞ்சள், மக்காச்சோளம், கரும்பு போன்ற பயிர்களை அந்தந்த விவசாயிகளே முன்வந்து அகற்றினார்கள். அதன்பின்னர் அந்த இடத்தில் 4 சக்கர வாகனங்கள் சென்று வரும் அளவுக்கு மண்பாதை அமைக்கப்பட்டது.
மேலும் வாய்க்கால் தூர்வாரப்பட்டு, கரை பலப்படுத்தப்பட்டது. இதற்கு செலவான 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அந்தந்த பகுதி விவசாயிகளே ஏற்று கொண்டனர்.
விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி ஏற்படுத்திய மண்பாதையை கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் காசியண்ணன், இணைச்செயலாளர் வெங்கடாசலபதி, பகிர்மான கமிட்டி தலைவர் செங்கோட்டையன், யு–10 பாசன சபை தலைவர் பழனிசாமி, துணைத்தலைவர் வெங்கடாசலம், செயலாளர் சுப்ரமணியம் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment