Saturday, October 11, 2014
அந்தியூர், பெருந்துறை, அம்மாபேட்டை பகுதி கோவில்களில் அ.தி.மு.க. வினர் சிறப்பு வழிபாடுகள் நடத்தினார்கள். மசூதியில் தொழுகையும் நடத்தப்பட்டது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலை ஆக வேண்டியும், அவருக்கு ஜாமீன் கிடைக்க வேண்டியும் ஈரோடு மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் 108 பால்குடங்கள் எடுத்து அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அந்தியூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.பி.எஸ்.ராஜா தலைமையில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதைதொடர்ந்து பொங்கல் வைத்து படைத்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருப்பூர் சத்தியபாமாவாசு எம்.பி., அந்தியூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அப்பாநாயக்கர், ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் டி.ஆர் முனுசாமிநாயுடு, அந்தியூர் பேரூராட்சி தலைவர் மீனாட்சிசுந்தரம், ஈரோடு மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர் சங்க செயலாளர் பழனிச்சாமி, பெருளாளர் ராஜாமணி, நகலூர் ஊராட்சி தலைவர் வெள்ளியங்கிரி உட்பட அ.தி.மு.க.வினர் திரளாக கலந்துகொண்டனர்.இதேபோல் செல்லீஸ்வரர் கோவில் மற்றும் வீரஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அதைதொடர்ந்து அந்தியூர் கெட்டிவிநாயகர் கோவிலில் ஒன்றிய செயலாளர் கே.பி.எஸ். ராஜா தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் 108 தேங்காய்கள் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
நிகழ்ச்சியில் அந்தியூர் பேரூராட்சி துணைத்தலைவர் சன்ரைஸ் சிவக்குமார், கவுன்சிலர் சிவக்குமார், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ரேவதிசண்முகவேல், கவுன்சிலர் ஜெயபிரகாஷ், செங்கல் உற்பத்தியாளர்கள் செல்வம் துரைசாமி உட்பட அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.மேலும் அ.தி.மு.க.வினர் பெருந்துறை செல்லாண்டி அம்மன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். நிகழ்ச்சிக்கு பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. செயலாளர் திங்களூர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் ஏ.கே.சாமிநாதன், ஒன்றியக்குழு தலைவர் பெரியசாமி, பேரூராட்சி தலைவர் ஜானகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் கைலங்கிரி குப்புசாமி, கூட்டுறவு நிலவள வங்கி தலைவர்கள் சேனாபதி, சுப்ரமணியம், பேரூராட்சி கவுன்சிலர்கள் சுப்ரமணியம், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது
ஒலகடம் பேரூர் அ.தி.மு.க. சார்பில் அம்மாபேட்டை அருகே உள்ள ஒலகடம் குந்துபாயூர் மசூதியில் அ.தி.மு.க.வினர் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். நிகழ்ச்சிக்கு பேரூர் அ.தி.மு.க. செயலாளர் வி.ஐ.முத்துசாமி தலைமை தாங்கினார். பவானி பி.ஜி.நாராயணன் எம்.எல்.ஏ., அம்மாபேட்டை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வி.எஸ்.சரவணபவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் எஸ்.எஸ்.அய்யாசாமி, மாவட்ட கவுன்சிலர் எஸ்.டி.சக்திவேல், பேரூராட்சி துணைத்தலைவர் முகமது சர்தார், பேரூர் அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளர் இன்பசேகரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் வடிவேல், போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க தலைவர் பூபதி, ஒன்றிய பொருளாளர் செங்கோட்டுவேல் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...

0 comments:
Post a Comment