Sunday, March 08, 2015
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கு
அதிமுக, திமுகவிற்கு மாற்று அணியாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என
காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கேட்டுக் கொண்டார்.
காந்திய மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் மதுரை பசுமலையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தேர்தலில் ஊழலை ஒழிக்க செலவுகளை மத்திய அரசே ஏற்க வேண்டும். பிரதமர் மோடி இலங்கை செல்வது வரவேற்கத்தக்கது. அதேசமயம் அவர் அங்குள்ள தமிழர்கள் நலன்காக்க வட கிழக்கு மாநிலங்களுக்கு நேரில் சென்று பார்வையிட வேண்டும். ஊழலை ஒழிக்க "லோக் ஆயுக்தா' சட்டத்தையும், பொதுச் சேவைகளுக்கான உரிமைச் சட்டத்தையும் தமிழக அரசு கொண்டுவர வேண்டும். தவறினால் அதற்காக காந்திய மக்கள் இயக்கம் மாநில முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சியினர் முதல்வர் கனவை மறந்துவிட்டு அதிமுக, திமுகவிற்கு மாற்று சக்தியாக ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். அதற்கு இப்போதே மக்கள் பிரச்னைகளை முன்னெடுத்து கூட்டாக போராட்டங்களை நடத்த வேண்டும். அந்த கூட்டணியில் காந்திய மக்கள் இயக்கமும் பங்கேற்கும். காந்திய மக்கள் இயக்கம் 2021 இல் தமிழகத்தின் தவிர்க்க முடியாக சக்தியாக உருவெடுக்கும் என்றார்.
செயற்குழுக் கூட்டத்தில் காந்திய மக்கள் இயக்க மாநிலத் துணைத் தலைவர்கள் கந்தசாமி, கோயில்பிள்ளை, பொருளாளர் குமரய்யா, பொதுச்செயலர் துரைக்கண்ணு, செய்தி தொடர்பாளர் ஜி. அய்யல்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றன
காந்திய மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் மதுரை பசுமலையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தேர்தலில் ஊழலை ஒழிக்க செலவுகளை மத்திய அரசே ஏற்க வேண்டும். பிரதமர் மோடி இலங்கை செல்வது வரவேற்கத்தக்கது. அதேசமயம் அவர் அங்குள்ள தமிழர்கள் நலன்காக்க வட கிழக்கு மாநிலங்களுக்கு நேரில் சென்று பார்வையிட வேண்டும். ஊழலை ஒழிக்க "லோக் ஆயுக்தா' சட்டத்தையும், பொதுச் சேவைகளுக்கான உரிமைச் சட்டத்தையும் தமிழக அரசு கொண்டுவர வேண்டும். தவறினால் அதற்காக காந்திய மக்கள் இயக்கம் மாநில முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சியினர் முதல்வர் கனவை மறந்துவிட்டு அதிமுக, திமுகவிற்கு மாற்று சக்தியாக ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். அதற்கு இப்போதே மக்கள் பிரச்னைகளை முன்னெடுத்து கூட்டாக போராட்டங்களை நடத்த வேண்டும். அந்த கூட்டணியில் காந்திய மக்கள் இயக்கமும் பங்கேற்கும். காந்திய மக்கள் இயக்கம் 2021 இல் தமிழகத்தின் தவிர்க்க முடியாக சக்தியாக உருவெடுக்கும் என்றார்.
செயற்குழுக் கூட்டத்தில் காந்திய மக்கள் இயக்க மாநிலத் துணைத் தலைவர்கள் கந்தசாமி, கோயில்பிள்ளை, பொருளாளர் குமரய்யா, பொதுச்செயலர் துரைக்கண்ணு, செய்தி தொடர்பாளர் ஜி. அய்யல்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
0 comments:
Post a Comment