Thursday, March 26, 2015
தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் உற்பத்தி செய்த பொருள்கள் இடம்பெற்றுள்ள கண்காட்சி திருப்பூரில் புதன்கிழமை தொடங்கியது.
மாவட்ட தொழில் மையம் சார்பில் அனுப்பர்பாளையம் எஸ்.எம்.திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னராமசாமி தொடங்கி வைத்தார்.
இதில், பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்டத்தில் மானியத்துடன் தொழில் தொடங்கியுள்ள பயனாளிகளின் உற்பத்திப் பொருள்கள் இடம் பெற்றுள்ளன.
புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், ஆயத்த ஆடைகள், உள்ளாடைகள், ஹாலோ பிளாக், சாம்பல் கற்கள், பேப்பர் கப், தேங்காய் எண்ணெய், உலோகப் பாத்திரங்கள், பாக்கு மட்டை தட்டுகள் உள்ளிட்ட உற்பத்திப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில், கணினி இணையதள மையம், அழகு நிலையம் போன்ற தொழில்களுக்கு வழங்கப்படும் கடனுதவிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகின்றன.
இதில், மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக தொழிற்பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னராமசாமி பேசியது:
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், கிராமப் புறங்களில் தொடங்கப்படும் வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு, பொதுப் பிரிவினருக்கு 25 சதவீத மானியமும், இதர பிரிவினருக்கு 35 சதவீத மானியமும் வழங்கப்படும். நகர்புற பகுதிகளில் தொடங்கப்படும் வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கு, பொதுப் பிரிவினருக்கு 15 சதவீத மானியமும், இதர பிரிவினருக்கு 25 சதவீத மானியமும் வழங்கப்படும்.
மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வுக் குழு மூலமாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். இத்திட்டத்தில், 2014-15ஆம் ஆண்டில் 48 பேருக்கு ரூ. 1.95 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பி.ரங்கசாமி, உதவிப் பொறியாளர் ஜி.திருமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இக்கண்காட்சி வெள்ளிக்கிழமை (மார்ச் 27) வரை நடைபெற உள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
0 comments:
Post a Comment