Tuesday, March 17, 2015
சீரான குடிநீர் விநியோகிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, ஆட்சியரிடம் பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆட்சியரிடம் அக்கட்சியினர் திங்கள்கிழமை அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட 11-ஆவது வார்டு ஈ.பி.காலனியில் உள்ள மேல்நிலைக் குடிநீர் தொட்டியிலிருந்து 8 நாள்களுக்கு ஒருமுறை 2 மணி நேரம் வீதம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், 8 நாள்கள் குடிநீரை சேமித்து வைத்தால், டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் எனக் கூறி, மாநகராட்சி நிர்வாகம் தாற்காலிகமாக ஒரு மணி நேரம் மட்டும் குடிநீர் விநியோகிக்கிறது.
இதன்படி, தொடக்கத்தில் 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 8 நாள்களுக்கு ஒரு முறை ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடமும், கவுன்சிலர்களிடமும் பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
0 comments:
Post a Comment