Tuesday, March 17, 2015
திருப்பூரில் வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்ற இரு பெண்கள் உள்பட மூன்று பேரை காணவில்லை. இச் சம்பவம் தொடர்பாக, திருப்பூர் ஊரகம் மற்றும் மத்திய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி முருகேஷ்வரி (36). இவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்கு செல்வதாகக் கூறி சென்ற முருகேஷ்வரி, மாலையாகியும் வீடு திரும்பவில்லை. தகவலறிந்த ராமமூர்த்தி, நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் விசாரித்துள்ளார். எனினும், அவரது மனைவியை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லையாம். தொடர்ந்து, ராமமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில், திருப்பூர் ஊரக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதே போல், தாராபுரம் சாலை கோயில் வழி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜின் மகள் மகேஷ்வரி (22). அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 3 ஆம் தேதி வேலைக்கு சென்ற இவர், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தங்கராஜ் கொடுத்த புகாரின்பேரில், திருப்பூர் ஊரக போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.
பாளையக்காடு கே.வி.ஆர். நகரைச் சேர்ந்த வள்ளி என்பவரின் மகன் ரமேஷ் (28). பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்றவர், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மத்திய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
0 comments:
Post a Comment