Thursday, April 02, 2015
நெட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் உதவித் தொகையுடன் பிஎச்டி ஆராய்ச்சியை (Non-NET Phd Fellowship) மேற்கொள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு ரூ.10 கோடியை பல்கலைக்கழக மானியக் குழு ஒதுக்கியுள்ளது என்று துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் தெரிவித்தார்.
பல்கலை.யின் மு.வ. அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்சிப் பேரவைக் கூட்டத்தில் அவர் பேசியது:
ஆற்றல்சார் பல்கலை. அந்தஸ்து பெற்றுள்ள மதுரை காமராஜர் பல்கலை.க்கு சிறப்பு அங்கீகாரம் அளிக்கும் வகையில், யுஜிசி ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெறாதவர்களும் உதவித் தொகையுடன் பிஎச்டி ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்கலை.யில் கூடுதலாக 100 மாணவர்கள் பிஎச்டி ஆராய்ச்சி மேற்கொள்ள முடியும்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு மதுரை காமராஜர் பல்கலை. விண்ணப்பித்துள்ளது. அதில் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 உயர்கல்வி நிறுவனங்களில் மதுரை காமராஜர் பல்கலை.யும் இடம் பெற்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள மதுரை காமராஜர் பல்கலை. உறுப்புக் கல்லூரிக்கு நிரந்தரக் கட்டடம் கட்டுவதற்கு, தமிழக அரசு ரூ.2.41 கோடி ஒதுக்கீடு செய்து, கட்டுமானப் பணிக்கான முதல் தவணைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள பல்கலை.யின் உறுப்புக் கல்லூரிக்கான நிரந்தரக் கட்டடம் கட்ட அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. கால்நடைப் பராமரிப்புத் துறையிடம் இருந்து இதற்கான நிலம் இலவசமாகப் பெறப்படும் என்றார்.
வரும் நிதியாண்டுக்கான (2015-16) பட்ஜெட் அறிக்கை செனட் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், கல்வி சார்ந்த மேம்பாட்டுப் பணிகளுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.20 லட்சத்தில் காணொலி காட்சி வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள், ரூ.15 லட்சத்தில் மொழி ஆய்வகங்கள், ரூ.20 லட்சத்தில் தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக பதிவாளர் என்.ராஜசேகர், சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment