Thursday, April 02, 2015
விளையாட்டுகளில் கவனம் செலுத்தினால் குற்றங்கள் குறையும் என மதுரை மாநகர் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் கூறினார்.
மதுரை மாநகர் காவல்துறை சார்பில் நடைபெற்ற போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை பங்கேற்று அவர் பேசியதாவது: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாட நேரமின்றி உள்ளனர். குழந்தைகள் படிப்பு, தொலைக்காட்சி பார்த்தல் என இருப்பதால் விளையாட நேரம் கிடைப்பதில்லை. பெரியவர்கள் வியாபாரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதால் விளையாட்டில் கவனம் செலுத்தமுடிவதில்லை.
வியாபாரம், விளையாட்டு, சமூகசேவை என நேரம் ஒதுக்கிச் செயல்பட்டால் வாழ்வு சிறப்பாக இருக்கும். விளையாட்டில் கவனம் செலுத்தினால் குற்றங்களும் குறையும். போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவுக்கு விளையாட்டு சிறந்த பாலமாக இருக்கிறது. தமிழக அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்துச் செயல்படுகிறது என்றார்.
மதுரை மண்டல விளையாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் வாழ்வீமராஜா வாழ்த்திப் பேசுகையில், நாட்டிலேயே விளையாட்டுக்கு அதிக நிதி அளித்திருப்பது தமிழக அரசுதான். மாநிலத்தில் 24 விளையாட்டு விடுதிகள் மூலம் விளையாட்டு வீரர்களை உருவாக்கிவருகிறது. விளையாட்டை மேம்படுத்தினால் குற்றமற்ற சமூகத்தை உருவாக்கலாம் என்றார்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்: மதுரை ஆயுதப்படை மைதானத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகளில் கைப்பந்தில் (ஆண்கள் பிரிவு) போலீஸ் அணியும், பெண்கள் பிரிவில் டோக் பெருமாட்டி கல்லூரியும் முதலிடம் வகித்தன. கபடியில் ஆண்கள் பிரிவில் கலாசிமிண்ட், பெண்கள் பிரிவில் டோக் பெருமாட்டி கல்லூரி ஆகியவை முதலிடம் பெற்றன.
800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் அமெரிக்கன் கல்லூரி மாணவர் காசிமாயனும், 400 மீட்டரில் அதே கல்லூரி மாணவர் இளமுருகுவும், பெண்கள் பிரிவில் டோக் பெருமாட்டி கல்லூரி கார்த்திகாவும் முதலிடம் வகித்தனர்.
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் சேத்தனா பள்ளி மாணவர் சசிகுமாரும், பெண்கள் பிரிவில் அருப்புக்கோட்டை நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சி.எஸ்.பிரியாவும் முதலிடம் வகித்தனர். கயிறு இழுக்கும் போட்டியில் மாநகர் காவல் துறை அணியை ஊர்க்காவல்படை அணியினர் வென்றனர்.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாநகர் துணை ஆணையர் ராஜராஜன் (தலைமையிடம்) வரவேற்றார். காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் பரிசுகளை வழங்கினார். துணை ஆணையர் (குற்றப்பிரிவு) உமையாள் வாழ்த்திப் பேசினார். ஆயுதப்படைப் பிரிவு உதவி ஆணையர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மதுரை மாநகர் காவல்துறை சார்பில் நடைபெற்ற போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை பங்கேற்று அவர் பேசியதாவது: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாட நேரமின்றி உள்ளனர். குழந்தைகள் படிப்பு, தொலைக்காட்சி பார்த்தல் என இருப்பதால் விளையாட நேரம் கிடைப்பதில்லை. பெரியவர்கள் வியாபாரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதால் விளையாட்டில் கவனம் செலுத்தமுடிவதில்லை.
வியாபாரம், விளையாட்டு, சமூகசேவை என நேரம் ஒதுக்கிச் செயல்பட்டால் வாழ்வு சிறப்பாக இருக்கும். விளையாட்டில் கவனம் செலுத்தினால் குற்றங்களும் குறையும். போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவுக்கு விளையாட்டு சிறந்த பாலமாக இருக்கிறது. தமிழக அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்துச் செயல்படுகிறது என்றார்.
மதுரை மண்டல விளையாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் வாழ்வீமராஜா வாழ்த்திப் பேசுகையில், நாட்டிலேயே விளையாட்டுக்கு அதிக நிதி அளித்திருப்பது தமிழக அரசுதான். மாநிலத்தில் 24 விளையாட்டு விடுதிகள் மூலம் விளையாட்டு வீரர்களை உருவாக்கிவருகிறது. விளையாட்டை மேம்படுத்தினால் குற்றமற்ற சமூகத்தை உருவாக்கலாம் என்றார்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்: மதுரை ஆயுதப்படை மைதானத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகளில் கைப்பந்தில் (ஆண்கள் பிரிவு) போலீஸ் அணியும், பெண்கள் பிரிவில் டோக் பெருமாட்டி கல்லூரியும் முதலிடம் வகித்தன. கபடியில் ஆண்கள் பிரிவில் கலாசிமிண்ட், பெண்கள் பிரிவில் டோக் பெருமாட்டி கல்லூரி ஆகியவை முதலிடம் பெற்றன.
800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் அமெரிக்கன் கல்லூரி மாணவர் காசிமாயனும், 400 மீட்டரில் அதே கல்லூரி மாணவர் இளமுருகுவும், பெண்கள் பிரிவில் டோக் பெருமாட்டி கல்லூரி கார்த்திகாவும் முதலிடம் வகித்தனர்.
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் சேத்தனா பள்ளி மாணவர் சசிகுமாரும், பெண்கள் பிரிவில் அருப்புக்கோட்டை நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சி.எஸ்.பிரியாவும் முதலிடம் வகித்தனர். கயிறு இழுக்கும் போட்டியில் மாநகர் காவல் துறை அணியை ஊர்க்காவல்படை அணியினர் வென்றனர்.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாநகர் துணை ஆணையர் ராஜராஜன் (தலைமையிடம்) வரவேற்றார். காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் பரிசுகளை வழங்கினார். துணை ஆணையர் (குற்றப்பிரிவு) உமையாள் வாழ்த்திப் பேசினார். ஆயுதப்படைப் பிரிவு உதவி ஆணையர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
0 comments:
Post a Comment