Thursday, April 02, 2015
விளையாட்டுகளில் கவனம் செலுத்தினால் குற்றங்கள் குறையும் என மதுரை மாநகர் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் கூறினார்.
மதுரை மாநகர் காவல்துறை சார்பில் நடைபெற்ற போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை பங்கேற்று அவர் பேசியதாவது: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாட நேரமின்றி உள்ளனர். குழந்தைகள் படிப்பு, தொலைக்காட்சி பார்த்தல் என இருப்பதால் விளையாட நேரம் கிடைப்பதில்லை. பெரியவர்கள் வியாபாரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதால் விளையாட்டில் கவனம் செலுத்தமுடிவதில்லை.
வியாபாரம், விளையாட்டு, சமூகசேவை என நேரம் ஒதுக்கிச் செயல்பட்டால் வாழ்வு சிறப்பாக இருக்கும். விளையாட்டில் கவனம் செலுத்தினால் குற்றங்களும் குறையும். போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவுக்கு விளையாட்டு சிறந்த பாலமாக இருக்கிறது. தமிழக அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்துச் செயல்படுகிறது என்றார்.
மதுரை மண்டல விளையாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் வாழ்வீமராஜா வாழ்த்திப் பேசுகையில், நாட்டிலேயே விளையாட்டுக்கு அதிக நிதி அளித்திருப்பது தமிழக அரசுதான். மாநிலத்தில் 24 விளையாட்டு விடுதிகள் மூலம் விளையாட்டு வீரர்களை உருவாக்கிவருகிறது. விளையாட்டை மேம்படுத்தினால் குற்றமற்ற சமூகத்தை உருவாக்கலாம் என்றார்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்: மதுரை ஆயுதப்படை மைதானத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகளில் கைப்பந்தில் (ஆண்கள் பிரிவு) போலீஸ் அணியும், பெண்கள் பிரிவில் டோக் பெருமாட்டி கல்லூரியும் முதலிடம் வகித்தன. கபடியில் ஆண்கள் பிரிவில் கலாசிமிண்ட், பெண்கள் பிரிவில் டோக் பெருமாட்டி கல்லூரி ஆகியவை முதலிடம் பெற்றன.
800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் அமெரிக்கன் கல்லூரி மாணவர் காசிமாயனும், 400 மீட்டரில் அதே கல்லூரி மாணவர் இளமுருகுவும், பெண்கள் பிரிவில் டோக் பெருமாட்டி கல்லூரி கார்த்திகாவும் முதலிடம் வகித்தனர்.
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் சேத்தனா பள்ளி மாணவர் சசிகுமாரும், பெண்கள் பிரிவில் அருப்புக்கோட்டை நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சி.எஸ்.பிரியாவும் முதலிடம் வகித்தனர். கயிறு இழுக்கும் போட்டியில் மாநகர் காவல் துறை அணியை ஊர்க்காவல்படை அணியினர் வென்றனர்.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாநகர் துணை ஆணையர் ராஜராஜன் (தலைமையிடம்) வரவேற்றார். காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் பரிசுகளை வழங்கினார். துணை ஆணையர் (குற்றப்பிரிவு) உமையாள் வாழ்த்திப் பேசினார். ஆயுதப்படைப் பிரிவு உதவி ஆணையர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மதுரை மாநகர் காவல்துறை சார்பில் நடைபெற்ற போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை பங்கேற்று அவர் பேசியதாவது: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாட நேரமின்றி உள்ளனர். குழந்தைகள் படிப்பு, தொலைக்காட்சி பார்த்தல் என இருப்பதால் விளையாட நேரம் கிடைப்பதில்லை. பெரியவர்கள் வியாபாரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதால் விளையாட்டில் கவனம் செலுத்தமுடிவதில்லை.
வியாபாரம், விளையாட்டு, சமூகசேவை என நேரம் ஒதுக்கிச் செயல்பட்டால் வாழ்வு சிறப்பாக இருக்கும். விளையாட்டில் கவனம் செலுத்தினால் குற்றங்களும் குறையும். போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவுக்கு விளையாட்டு சிறந்த பாலமாக இருக்கிறது. தமிழக அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்துச் செயல்படுகிறது என்றார்.
மதுரை மண்டல விளையாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் வாழ்வீமராஜா வாழ்த்திப் பேசுகையில், நாட்டிலேயே விளையாட்டுக்கு அதிக நிதி அளித்திருப்பது தமிழக அரசுதான். மாநிலத்தில் 24 விளையாட்டு விடுதிகள் மூலம் விளையாட்டு வீரர்களை உருவாக்கிவருகிறது. விளையாட்டை மேம்படுத்தினால் குற்றமற்ற சமூகத்தை உருவாக்கலாம் என்றார்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்: மதுரை ஆயுதப்படை மைதானத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகளில் கைப்பந்தில் (ஆண்கள் பிரிவு) போலீஸ் அணியும், பெண்கள் பிரிவில் டோக் பெருமாட்டி கல்லூரியும் முதலிடம் வகித்தன. கபடியில் ஆண்கள் பிரிவில் கலாசிமிண்ட், பெண்கள் பிரிவில் டோக் பெருமாட்டி கல்லூரி ஆகியவை முதலிடம் பெற்றன.
800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் அமெரிக்கன் கல்லூரி மாணவர் காசிமாயனும், 400 மீட்டரில் அதே கல்லூரி மாணவர் இளமுருகுவும், பெண்கள் பிரிவில் டோக் பெருமாட்டி கல்லூரி கார்த்திகாவும் முதலிடம் வகித்தனர்.
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் சேத்தனா பள்ளி மாணவர் சசிகுமாரும், பெண்கள் பிரிவில் அருப்புக்கோட்டை நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சி.எஸ்.பிரியாவும் முதலிடம் வகித்தனர். கயிறு இழுக்கும் போட்டியில் மாநகர் காவல் துறை அணியை ஊர்க்காவல்படை அணியினர் வென்றனர்.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாநகர் துணை ஆணையர் ராஜராஜன் (தலைமையிடம்) வரவேற்றார். காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் பரிசுகளை வழங்கினார். துணை ஆணையர் (குற்றப்பிரிவு) உமையாள் வாழ்த்திப் பேசினார். ஆயுதப்படைப் பிரிவு உதவி ஆணையர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment