Thursday, April 02, 2015
மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு
பகுதிகளில் முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களை அரசுடமையாக்கும்
முயற்சிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இதுதொடர்பாக முன்னாள் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா 2 வழக்குகளும், தற்போதைய கலெக்டர் சுப்பிரமணியன் 144 வழக்குகளும், மேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இதில் பி.ஆர்.பி. உள்பட பல நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேலும் பல இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட கிரானைட் கற்களை அரசுடமையாக்குவதற்காக அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி மற்றும் நில அளவையர்கள் மூலம் அதிகாரிகள் கணக்கெடுத்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட கிரானைட் நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர்வது குறித்து மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனுடன், கனிம வள உதவி இயக்குநர் ஆறுமுகநயினார், துணை தாசில்தார் இளமுருகன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
இதுதொடர்பாக மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மேலூர் பகுதிகளில் பல இடங்களில் மேலும் கிரானைட் கற்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளன. இவற்றையும் அரசுடமையாக்க கோரி மேலும் 20 வழக்குகள் வரை விரைவில் தாக்கல் செய்யப்படும்’’ என்றார்.
இந்த நிலையில் மேலூர் மற்றும் திருவாதவூர் பகுதிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்கள் அனுமதி பெறாமல் லாரிகளில் கடத்தப்படுவதாக சகாயம் குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து இன்று காலை சகாயம் குழுவை சேர்ந்த ஆல்பர்ட், வேளாண் உதவி இயக்குநர் ஜெயசிங் ஞானதுரை மற்றும் அதிகாரிகள் மேலூர் பகுதிகளில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக அனைத்து லாரிகளையும் நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது 3 லாரிகளில் கிரானைட் கற்கள் ஏற்றப்பட்டு வந்தது. அதனை நிறுத்தி அதிகாரிகள் லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கிரானைட் கற்களை லாரிகளில் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்களை காண்பித்தனர். அதனை தொடர்ந்து அந்த 3 லாரிகளும் செல்ல அனுமதித்தனர். தொடர்ந்து அந்த பகுதிகளில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
0 comments:
Post a Comment