Wednesday, April 01, 2015

On Wednesday, April 01, 2015 by Unknown in ,    




மாணவர்களுக்கு தன்னம்பிக்கையே மூலதனம் என்று ஆட்சியர் கு.கோவிந்தராஜ் பேசினார்.
மங்கரசுவலையபாளையம் ஊராட்சி, பேரநாயக்கன்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா நடைபெற்றது. இதற்கு, சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஏ.கருப்பசாமி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ப.வெங்கடாசலம் வரவேற்றார்.
இதில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கி ஆட்சியர் கோவிந்தராஜ் பேசியது:
மாணவர்கள், பெற்றோர்களுக்கு நிகராக ஆசிரியர்கள், பெரியோர்கள், உறவினர்களை மதிக்க வேண்டும். எதற்கும் துவண்டு விடாமல், தன்னம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு, முன்னேற வேண்டும். பிறருக்கு உதவும் பழக்கத்தை பள்ளிப் பருவத்திலேயே கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல முறையில் கல்வி பயின்று வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
வட்டாட்சியர் ரமேஷ், ஒன்றியக் குழுத் தலைவர் பத்மநந்தினி ஜெகதீசன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சீ.ராஜாமணி, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ந.மகேஸ்வரி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சு.விஸ்வநாதன், கிராம கல்விக் குழுத் தலைவர் வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

0 comments: