Wednesday, April 01, 2015
மாணவர்களுக்கு தன்னம்பிக்கையே மூலதனம் என்று ஆட்சியர் கு.கோவிந்தராஜ் பேசினார்.
மங்கரசுவலையபாளையம் ஊராட்சி, பேரநாயக்கன்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா நடைபெற்றது. இதற்கு, சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஏ.கருப்பசாமி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ப.வெங்கடாசலம் வரவேற்றார்.
இதில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கி ஆட்சியர் கோவிந்தராஜ் பேசியது:
மாணவர்கள், பெற்றோர்களுக்கு நிகராக ஆசிரியர்கள், பெரியோர்கள், உறவினர்களை மதிக்க வேண்டும். எதற்கும் துவண்டு விடாமல், தன்னம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு, முன்னேற வேண்டும். பிறருக்கு உதவும் பழக்கத்தை பள்ளிப் பருவத்திலேயே கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல முறையில் கல்வி பயின்று வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
வட்டாட்சியர் ரமேஷ், ஒன்றியக் குழுத் தலைவர் பத்மநந்தினி ஜெகதீசன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சீ.ராஜாமணி, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ந.மகேஸ்வரி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சு.விஸ்வநாதன், கிராம கல்விக் குழுத் தலைவர் வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment