Wednesday, April 01, 2015

On Wednesday, April 01, 2015 by Unknown in ,    
அமராவதி பாசனத்தை விரிவுபடுத்த நல்லாறு அணைத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டுமென அமராவதி நதிநீர் பாசன பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமராவதி நதிநீர் பாசன இயக்கம், ரயில்வே மக்கள் பணி சங்கம் ஆகியன சார்பில் தென்னிந்திய நதிகளை இணைக்க கோரும் ஆலோசனைக் கூட்டம் தாராபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அமராவதி நதிநீர் பாசன இயக்கத் தலைவர் லிங்கம் சின்னச்சாமி தலைமை வகித்தார். மக்கள் சக்தி இயக்கத்தின் மாநிலச் செயலர் என்.பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
இதில், அமராவதி பாசனத்தை விரிவுபடுத்த நல்லாறு அணைத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தேசிய நீர்வழிச்சாலை திட்டத்தால் எல்ல மாநிலங்களும் தண்ணீரை பெறுகின்ற மாநிலமாக மாறுவதுடன், உபரி மின்சாரம், வேளாண்மை, தொழில் வளம் பெருகும்.
இதை பாஜக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

0 comments: