Wednesday, April 01, 2015
பல்லடம் அருகே கோழிப் பண்ணையில், நோய் தாக்கி இறந்த கோழியின் இறைச்சியை விற்பனை செய்ததாக இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. சில பண்ணைகளில் நோய் தாக்கி இறந்த கோழிகளை அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுவரும் சிலர், இறந்த கோழிகளை வெட்டி, சுத்தம் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். அவ்வப்போது, திருப்பூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், திடீர் சோதனையிட்டு, இதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில், கோழிப் பண்ணைகளில் இறந்த கோழிகளின் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக, பல்லடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று, இறந்த கோழிகளின் இறைச்சியை சாலையோரக் கடைகளுக்கு விற்பனை செய்த காளீஸ்வரன் (40), மெய்ஞானமூர்த்தி (44) ஆகியோரிடம் இருந்து 15 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து, அவர்கள் இருவரையும் கைது செய்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
.jpg)
0 comments:
Post a Comment