Wednesday, April 01, 2015
பல்லடம் அருகே கோழிப் பண்ணையில், நோய் தாக்கி இறந்த கோழியின் இறைச்சியை விற்பனை செய்ததாக இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. சில பண்ணைகளில் நோய் தாக்கி இறந்த கோழிகளை அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுவரும் சிலர், இறந்த கோழிகளை வெட்டி, சுத்தம் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். அவ்வப்போது, திருப்பூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், திடீர் சோதனையிட்டு, இதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில், கோழிப் பண்ணைகளில் இறந்த கோழிகளின் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக, பல்லடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று, இறந்த கோழிகளின் இறைச்சியை சாலையோரக் கடைகளுக்கு விற்பனை செய்த காளீஸ்வரன் (40), மெய்ஞானமூர்த்தி (44) ஆகியோரிடம் இருந்து 15 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து, அவர்கள் இருவரையும் கைது செய்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment