Wednesday, April 01, 2015

On Wednesday, April 01, 2015 by Unknown in ,    




பல்லடம் அருகே கோழிப் பண்ணையில், நோய் தாக்கி இறந்த கோழியின் இறைச்சியை விற்பனை செய்ததாக இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. சில பண்ணைகளில் நோய் தாக்கி இறந்த கோழிகளை அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுவரும் சிலர், இறந்த கோழிகளை வெட்டி, சுத்தம் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். அவ்வப்போது, திருப்பூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், திடீர் சோதனையிட்டு, இதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில், கோழிப் பண்ணைகளில் இறந்த கோழிகளின் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக, பல்லடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று, இறந்த கோழிகளின் இறைச்சியை சாலையோரக் கடைகளுக்கு விற்பனை செய்த காளீஸ்வரன் (40), மெய்ஞானமூர்த்தி (44) ஆகியோரிடம் இருந்து 15 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து, அவர்கள் இருவரையும் கைது செய்தனர்

0 comments: