Wednesday, April 01, 2015

On Wednesday, April 01, 2015 by Unknown in ,    



பல்லடம் அருகே உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்த மதிமுக நிர்வாகி குடும்பத்துக்கு, அந்த கட்சியின் பொதுசெயலாளர் வைகோ திங்கள்கிழமை நிதி உதவி வழங்கினார்.
பல்லடம் ஒன்றிய மதிமுக அவைத் தலைவர் சின்னசாமி (62) உடல் நல குறைவினால், அண்மையில் மரணமடைந்தார். இந்நிலையில், பெருமாகவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு துக்கம் விசாரிப்பதற்காக திங்கள்கிழமை சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சின்னசாமி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து,
அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர், அந்த குடும்பத்துக்கு, குடும்ப நல நிதியாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை சின்னசாமியின் மனைவி வள்ளியம்மாளிடம் வழங்கினார்.
மாவட்டச் செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், ஒன்றியச் செயலாளர் மு.சுப்பிரமணியம், கோடங்கிபாளையம் ஊராட்சித் தலைவர் காவீ.புவனேஸ்வரி பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 comments: