Wednesday, April 01, 2015
உடுமலையை அடுத்துள்ள தளி கிராமத்தில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தை இடம் மாற்ற வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தளி பேருராட்சித் தலைவர் தெய்வநாயகியிடம், பொதுமக்கள் சார்பில் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனு விவரம்:
கடந்த 1964-ஆம் ஆண்டு தளி பேரூராட்சியில் பகுதி நேர கிளை நூலகம் தொடங்கப்பட்டது. தற்போது முழு நேரமாக செயல்பட்டு வரும் இந்த நூலகத்தில் 1,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
தற்போது உள்ள நூலகக் கட்டடம், பெண்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் வந்து செல்ல முடியாத இடத்திலும், போதிய வெளிச்சம் இன்றியும் அமைந்துள்ளது.
மேலும், நூலகர் அடிக்கடி விடுப்பு எடுப்பதால் பெரும்பாலான நாள்களில் நூலகம் முடியே கிடக்கிறது. நூலகக் கட்டடம் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருப்பதால் தவறான நடவடிக்கைகளுக்கும் பயன்பட்டு வருகிறது.
இந்நிலையில், தளி பிரதான சாலையில் இருந்த காவல் நிலைய கட்டடம் இடிக்கப்பட்டு அந்த இடம் பேரூராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகையால், அந்த இடத்தில் நூலகத்திற்கென புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment