Wednesday, April 15, 2015
திருப்பூர், : திருப்பூரில் பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். 60 பேரை போலீசார் கைது செய்தனர். மாட்டு இறைச்சியை தடை செய்துள்ளதை கண்டித்து, திருப்பூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் சார்பாக மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று திருப்பூர் குமரன் சிலை அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை முன்பாக போராட்டத்தில் பங்கேற்க ஏராளமானோர் திரண்டனர். ஆனால் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆர்ப்பாட்டம் செய்ய மட்டும் அனுமதித்திருந்தனர். அதனால் அங்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் அங்ககுமார், மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் தலித் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை, ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் கலந்து கொண்டனர்.
பெரியார் சிலை அருகில் ஏராளமான போலீசார் துணை ஆணையாளர் சுந்தரவடிவேல் தலைமையில் குவிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையில் தடைமீறி மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்திற்காக மாட்டிறைச்சி உணவு ஒரு பாத்திரத்தில் கொண்டு வரப்பட்டது. அதனை ஆர்ப்பாட்டக்காரர்கள் சாப்பிடுவதற்கு தயாரானார்கள். ஆனால் திருப்பூர் வடக்கு போலீசார், மாட்டிறைச்சி உணவை பறிமுதல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை கைது செய்தனர். அவர்களை கே.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இப்போராட்டம் காரணமாக காலை முதல் அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
பெரியார் சிலை அருகில் ஏராளமான போலீசார் துணை ஆணையாளர் சுந்தரவடிவேல் தலைமையில் குவிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையில் தடைமீறி மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்திற்காக மாட்டிறைச்சி உணவு ஒரு பாத்திரத்தில் கொண்டு வரப்பட்டது. அதனை ஆர்ப்பாட்டக்காரர்கள் சாப்பிடுவதற்கு தயாரானார்கள். ஆனால் திருப்பூர் வடக்கு போலீசார், மாட்டிறைச்சி உணவை பறிமுதல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை கைது செய்தனர். அவர்களை கே.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இப்போராட்டம் காரணமாக காலை முதல் அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment