Wednesday, April 15, 2015
திருப்பூர், : திருப்பூரில் பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். 60 பேரை போலீசார் கைது செய்தனர். மாட்டு இறைச்சியை தடை செய்துள்ளதை கண்டித்து, திருப்பூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் சார்பாக மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று திருப்பூர் குமரன் சிலை அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை முன்பாக போராட்டத்தில் பங்கேற்க ஏராளமானோர் திரண்டனர். ஆனால் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆர்ப்பாட்டம் செய்ய மட்டும் அனுமதித்திருந்தனர். அதனால் அங்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் அங்ககுமார், மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் தலித் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை, ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் கலந்து கொண்டனர்.
பெரியார் சிலை அருகில் ஏராளமான போலீசார் துணை ஆணையாளர் சுந்தரவடிவேல் தலைமையில் குவிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையில் தடைமீறி மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்திற்காக மாட்டிறைச்சி உணவு ஒரு பாத்திரத்தில் கொண்டு வரப்பட்டது. அதனை ஆர்ப்பாட்டக்காரர்கள் சாப்பிடுவதற்கு தயாரானார்கள். ஆனால் திருப்பூர் வடக்கு போலீசார், மாட்டிறைச்சி உணவை பறிமுதல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை கைது செய்தனர். அவர்களை கே.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இப்போராட்டம் காரணமாக காலை முதல் அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
பெரியார் சிலை அருகில் ஏராளமான போலீசார் துணை ஆணையாளர் சுந்தரவடிவேல் தலைமையில் குவிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையில் தடைமீறி மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்திற்காக மாட்டிறைச்சி உணவு ஒரு பாத்திரத்தில் கொண்டு வரப்பட்டது. அதனை ஆர்ப்பாட்டக்காரர்கள் சாப்பிடுவதற்கு தயாரானார்கள். ஆனால் திருப்பூர் வடக்கு போலீசார், மாட்டிறைச்சி உணவை பறிமுதல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை கைது செய்தனர். அவர்களை கே.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இப்போராட்டம் காரணமாக காலை முதல் அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
0 comments:
Post a Comment