Wednesday, April 15, 2015

On Wednesday, April 15, 2015 by Unknown in ,    
உடுமலை, : உடுமலை - கேரளா செல்லும் சாலையில் மறையூர் அருகே அமைந்துள்ளது நாட்டுவயல். விவசாயிகள் அதிகம் வசிக்கும் இங்கு சந்தன மரங்கள் அதிகளவில் உள்ளது.  இப்பகுதியில் விவசாயிகள் தோட்டத்தில் வளர்த்து வரும் சந்தனமரங்களை சில சமூகவிரோத கும்பல்கள் நள்ளிரவில் வெட்டி கடத்துகின்றன. நேற்று முன்தினம் இரவில் விவசாயி ஒருவரது தோட்டத்திற்குள் புகுந்த கும்பல் நன்கு வளர்ந்திருந்த 2 சந்தன மரங்களை வெட்டி கடத்தியது.  வெட்டி கடத்தப்பட்ட மரத்தின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.  மரம் வெட்டி கடத்தும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையம் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. சந்தன மரம் வெட்டி கடத்தும் கும்பல் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாக இப்பகுதி மக்கள் புலம்பி தவிக்கின்றனர்.

0 comments: