Wednesday, April 15, 2015

On Wednesday, April 15, 2015 by Unknown in ,    
திருப்பூர், : கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் எனது குழந்தையை மீட்டுத்தர வேண்டும் என திருப்பூர் எஸ்.பியிடம் இளம்பெண் புகார் மனு அளித்தார். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சேனாபதிபாளையத்தைச் சேர்ந்தவர் வெண்ணிலா (24). இவருக்கும் நத்தக்கடையூர் பழைய வெள்ளியம் பாளை யத்தை சேர்ந்த சுரேஷ் (30) என்பவருக்கும் 2013ம் ஆண்டு திருமணம் நடந் தது. ஒரு ஆண்குழந்தை உள்ள நிலையில் நேற்று திருப்பூர் எஸ்.பி அலுவலகத்திற்கு வந்த வெண்ணிலா, எஸ்.பி., அமித்குமார் சிங்கி டம் ‘கணவரும் அவரது குடும்பத்தினரும் எனது குழந்தையை மறைத்து வைத்துள்ளனர். மீட்டுத் தாருங்கள்‘ என புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் தெரித்துள்ளதாவது:

என கணவர் சுரேஷ், மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குடும்ப பிரச்னையால் கணவரை விட்டு பிரிந்து சிலநாட்கள் எனது அம்மா வீட்டில் தங்கி இருந்தேன். மீண்டும் எனது கணவர் சமாதானம் பேசி என்னை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 3தேதி எனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் சேர்ந்து எனது குழந்தையை மறை த்து வைத்து கொண்டனர். இது தொடர்பாக காங்கயம் மகளிர் போலீசில் புகார் செய்தேன். ஆனால் சரி யான பதிலளிக்க வில்லை. பின்னர் டி.ஸ்.பியிடம் புகார் தெரிவித்த பின் வழக்குப்பதிவு செய்து கொண் டனர். ஆனால், என் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று என்னிடம் மகளிர் போலீசார் மிரட்டி எழுதி வாங்கினர்.  இதுவரை எனது மகன் நிலை குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது கணவர் மற்றும் குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுத்து எனது குழந்தையை மீட்டு தரவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

0 comments: