Wednesday, April 08, 2015
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்தி
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத மாற்றுத்திறனாளியான படித்த இளைஞர்களுக்கு, மாதந்தோறும் தமிழக அரசால் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ. 300, பிளஸ் 2 படித்தவர்களுக்கு ரூ. 375, பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரிகளுக்கு ரூ. 450 வழங்கும் திட்டம் அமலில் உள்ளது.
இந்த உதவித் தொகையைப் பெற, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுக்கு மேல் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவராக இருக்க வேண்டும்.
2015-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதியன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும்.
மனுதாரர் முற்றிலுமாக வேலையில்லாதவராக இருக்க வேண்டும். கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ, மாணவியராக இருக்கக் கூடாது. ஆனால், தொலைதூரக் கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த உதவித்தொகையை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொண்டு பயன்பெறலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருப்பூர், : திருப்பூர் அரசு மருத்துவமனையில் பூட்டிக் கிடக்கும் மண்டல நோய் கண்டறியும் மையத்தை செயல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில...
-
திருச்சி 29.09.18 மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கான வரியை பாதியாக குறைக்க வேண்டும்-திருச்சியில் எல்.ஜே.டி. மாநில பொதுச் செ...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பொங்கலூர் அருகே டெங்கு காய்ச்சல் பாதித்த வடமலைபாளையம் ஊராட்சி பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் ஒட்டுமொத்த தூய்மை பணி நடைபெற்றது. இ...
-
கோவை, செப். 24– கோவையை அடுத்த திருமலையாம் பாளையத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக லட்சுமணன் உள்ளார்...
-
பொங்கலூர் ஒன்றியம் வேலம்பட்டியில்ரூ.11. 06 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
0 comments:
Post a Comment