Wednesday, April 08, 2015
திருப்பூர், தென்னம்பாளையம் செல்வபுரம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட மக்கள் பொது பயன்பாட்டுக்கான ரூ. 2 கோடி மதிப்பு உடைய நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி, 50-ஆவது வார்டு தென்னம்பாளையம், செல்வபுரம் பகுதியில் பொது பயன்பாட்டுக்கான 18 சென்ட் நிலம் உள்ளது. இதை அப்பகுதியை சேர்ந்த சில நபர்கள் ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, செல்வபுரம் பகுதி மக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஜூலை மாதம் நிலத்தை பராமரிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் அசோகன் உத்தரவின் பேரில், 4-ஆவது மண்டல உதவி ஆணையர் செல்வநாயகம் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள், திருப்பூர் தெற்கு போலீஸார் செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்திற்கு சென்றனர்.
நிலத்தை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டபோது, அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவு, ஆவணங்கள் காண்பிக்கப்பட்டு நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.
மேலும் மீட்கப்பட்ட இடத்தில் மாநகராட்சியினர் கம்பி வேலி அமைத்து, அந்த இடத்திற்குள் அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என எச்சரிக்கை பலகை வைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருப்பூர், : திருப்பூர் அரசு மருத்துவமனையில் பூட்டிக் கிடக்கும் மண்டல நோய் கண்டறியும் மையத்தை செயல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில...
-
திருச்சி 29.09.18 மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கான வரியை பாதியாக குறைக்க வேண்டும்-திருச்சியில் எல்.ஜே.டி. மாநில பொதுச் செ...
-
கர்நாடகாவில் கீழ்த்தரமான போராட்டங்கள் ! ஓசூர் கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளி அருகே தமிழக முதல்வர் உருவ படம் பாடை கட்டி வைத்து காவேரி ப்ரஜ...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பொங்கலூர் அருகே டெங்கு காய்ச்சல் பாதித்த வடமலைபாளையம் ஊராட்சி பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் ஒட்டுமொத்த தூய்மை பணி நடைபெற்றது. இ...
-
கோவை, செப். 24– கோவையை அடுத்த திருமலையாம் பாளையத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக லட்சுமணன் உள்ளார்...
0 comments:
Post a Comment