Wednesday, April 08, 2015
திருப்பூர், தென்னம்பாளையம் செல்வபுரம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட மக்கள் பொது பயன்பாட்டுக்கான ரூ. 2 கோடி மதிப்பு உடைய நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி, 50-ஆவது வார்டு தென்னம்பாளையம், செல்வபுரம் பகுதியில் பொது பயன்பாட்டுக்கான 18 சென்ட் நிலம் உள்ளது. இதை அப்பகுதியை சேர்ந்த சில நபர்கள் ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, செல்வபுரம் பகுதி மக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஜூலை மாதம் நிலத்தை பராமரிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் அசோகன் உத்தரவின் பேரில், 4-ஆவது மண்டல உதவி ஆணையர் செல்வநாயகம் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள், திருப்பூர் தெற்கு போலீஸார் செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்திற்கு சென்றனர்.
நிலத்தை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டபோது, அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவு, ஆவணங்கள் காண்பிக்கப்பட்டு நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.
மேலும் மீட்கப்பட்ட இடத்தில் மாநகராட்சியினர் கம்பி வேலி அமைத்து, அந்த இடத்திற்குள் அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என எச்சரிக்கை பலகை வைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
0 comments:
Post a Comment