Wednesday, April 08, 2015
திருப்பூர், தென்னம்பாளையம் செல்வபுரம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட மக்கள் பொது பயன்பாட்டுக்கான ரூ. 2 கோடி மதிப்பு உடைய நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி, 50-ஆவது வார்டு தென்னம்பாளையம், செல்வபுரம் பகுதியில் பொது பயன்பாட்டுக்கான 18 சென்ட் நிலம் உள்ளது. இதை அப்பகுதியை சேர்ந்த சில நபர்கள் ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, செல்வபுரம் பகுதி மக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஜூலை மாதம் நிலத்தை பராமரிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் அசோகன் உத்தரவின் பேரில், 4-ஆவது மண்டல உதவி ஆணையர் செல்வநாயகம் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள், திருப்பூர் தெற்கு போலீஸார் செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்திற்கு சென்றனர்.
நிலத்தை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டபோது, அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவு, ஆவணங்கள் காண்பிக்கப்பட்டு நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.
மேலும் மீட்கப்பட்ட இடத்தில் மாநகராட்சியினர் கம்பி வேலி அமைத்து, அந்த இடத்திற்குள் அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என எச்சரிக்கை பலகை வைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மடத்துக்குளம் பேரூராட்சி கழுகரையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான பொய் வழக்கிலிருந்து விரைவில் மீண்டு வந்து தமிழக ஆட்சிப் பொறுப்...
-
கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார்...
-
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மான்பிடிமங்கலம் சக்திவேல் அவர்களின் மனைவி நித்யா(25) மற்றும் அவர்களது 8 மாத கைக்குழந்தை பவ்யஸ...
-
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை தேஜஸ் ரோட்டரி சங்கம் அமைப்பின் சார்பில் 4 துறைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தத் துறையில் சிறந்த முறையில் ச...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
0 comments:
Post a Comment