Wednesday, April 08, 2015
காங்கயம் நகரில் பயணிகள் நிழற்குடை முன்பு பேருந்துகள் நிற்காததால், பயணிகள் பல ஆண்டுகளாக வெயிலிலும், மழையிலும் நின்றுகொண்டு பேருந்துக்காக காத்திருக்கும் அவல நிலை உள்ளது.
காங்கயம் நகரம், கோவை சாலை ரவுண்டானா அருகில் வட்டாட்சியர் அலுவலகம், காவல்நிலையம், தபால் நிலையம், பிஎஸ்என்எல் ஆகிய அரசு அலுவலகங்கள் உள்ளன.
இதில், கோவை மற்றும் அதன் வழியில் உள்ள ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் வசதிக்காக தனியார் நிறுவனத்தின் சார்பில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை அமைக்கப்பட்டு, நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், அந்த நிழற்குடை முன்பு பேருந்துகள் நிற்காமல், சில அடி தூரம் தள்ளியுள்ள நெரிசலான பகுதியில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
இதனால், நிழற்குடை இருந்தும் பேருந்துக்காக நீண்டநேரம் பயணிகள் வெயிலில் நின்று சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில், இந்த நிழற்குடை முன்பு பல ஆண்டுகளாக பேருந்துகள் நிற்காததால், நகராட்சி நிர்வாகமும் சரியான முறையில் நிழற்குடையைப் பராமரிக்கவில்லை.
அங்கு கழிவுநீர் தேங்கி நிற்பது மட்டுமல்லாமல, மனநலம் பாதித்தவர்கள் மற்றும் மதுபோதை மீறியவர்கள் எந்த நேரமும் நிழற்குடையில் படுத்திருக்கின்றனர்.
இதேபோல, பழையகோட்டை சாலை, போக்குவரத்து நகர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் வசதிக்காக டைல்ஸ் பதிக்கப்பட்டு அழகிய முறையில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிழற்குடை முன்பும் பேருந்துகள் நிற்பதில்லை.
இதுகுறித்து பயணிகள் தரப்பில் கூறியபோது, பேருந்து நிழற்குடைகள் பாதுகாப்பான இடங்களில்தான் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த இடங்களில் பேருந்துகளை நிறுத்தாமல், விபத்து நிகழ வாய்ப்புள்ள இடங்களில் பேருந்துகள் நின்று செல்கின்றன.
இந்த நிலையை மாற்ற போக்குவரத்து காவலர்கள், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment