Wednesday, April 08, 2015
காங்கயம் நகரில் பயணிகள் நிழற்குடை முன்பு பேருந்துகள் நிற்காததால், பயணிகள் பல ஆண்டுகளாக வெயிலிலும், மழையிலும் நின்றுகொண்டு பேருந்துக்காக காத்திருக்கும் அவல நிலை உள்ளது.
காங்கயம் நகரம், கோவை சாலை ரவுண்டானா அருகில் வட்டாட்சியர் அலுவலகம், காவல்நிலையம், தபால் நிலையம், பிஎஸ்என்எல் ஆகிய அரசு அலுவலகங்கள் உள்ளன.
இதில், கோவை மற்றும் அதன் வழியில் உள்ள ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் வசதிக்காக தனியார் நிறுவனத்தின் சார்பில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை அமைக்கப்பட்டு, நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், அந்த நிழற்குடை முன்பு பேருந்துகள் நிற்காமல், சில அடி தூரம் தள்ளியுள்ள நெரிசலான பகுதியில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
இதனால், நிழற்குடை இருந்தும் பேருந்துக்காக நீண்டநேரம் பயணிகள் வெயிலில் நின்று சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில், இந்த நிழற்குடை முன்பு பல ஆண்டுகளாக பேருந்துகள் நிற்காததால், நகராட்சி நிர்வாகமும் சரியான முறையில் நிழற்குடையைப் பராமரிக்கவில்லை.
அங்கு கழிவுநீர் தேங்கி நிற்பது மட்டுமல்லாமல, மனநலம் பாதித்தவர்கள் மற்றும் மதுபோதை மீறியவர்கள் எந்த நேரமும் நிழற்குடையில் படுத்திருக்கின்றனர்.
இதேபோல, பழையகோட்டை சாலை, போக்குவரத்து நகர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் வசதிக்காக டைல்ஸ் பதிக்கப்பட்டு அழகிய முறையில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிழற்குடை முன்பும் பேருந்துகள் நிற்பதில்லை.
இதுகுறித்து பயணிகள் தரப்பில் கூறியபோது, பேருந்து நிழற்குடைகள் பாதுகாப்பான இடங்களில்தான் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த இடங்களில் பேருந்துகளை நிறுத்தாமல், விபத்து நிகழ வாய்ப்புள்ள இடங்களில் பேருந்துகள் நின்று செல்கின்றன.
இந்த நிலையை மாற்ற போக்குவரத்து காவலர்கள், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மடத்துக்குளம் பேரூராட்சி கழுகரையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான பொய் வழக்கிலிருந்து விரைவில் மீண்டு வந்து தமிழக ஆட்சிப் பொறுப்...
-
கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார்...
-
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மான்பிடிமங்கலம் சக்திவேல் அவர்களின் மனைவி நித்யா(25) மற்றும் அவர்களது 8 மாத கைக்குழந்தை பவ்யஸ...
-
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை தேஜஸ் ரோட்டரி சங்கம் அமைப்பின் சார்பில் 4 துறைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தத் துறையில் சிறந்த முறையில் ச...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
0 comments:
Post a Comment