Wednesday, April 08, 2015

On Wednesday, April 08, 2015 by Unknown in ,    

கோடைக் காலம் துவங்கியுள்ள நிலையில், வெள்ளக்கோவிலில் எலுமிச்சம் பழம் ரூ. 10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 ஈரோடு, சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. அப்பகுதிகளிலிருந்து எலுமிச்சம் பழங்கள் பிற இடங்களுக்கு விற்பனைக்கு வருகிறது. தற்போது, எலுமிச்சம் பழங்களின் வரத்துக் குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.
 இரண்டு வாரத்துக்கு முன் அதிகபட்ச விலை கிலோ ரூ. 80 ஆக இருந்தது. தற்போது ரூ. 160 ஆக உள்ளது.
 இந்நிலையில், வெள்ளக்கோவில் மார்க்கெட்டில் பழக்கடைகள், காய்கறிக் கடைகள், சாலையோரக் கடைகளில் ஒரு பெரிய எலுமிச்சம் பழம் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

0 comments: