Wednesday, April 08, 2015
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், இதற்கு பயன்படுத்தப்பட்ட மின் மோட்டார், டீசல் என்ஜின்களை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை நூற்றுக்கணக்கான கரையோர கிராமங் களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் கோடைக் காலம் தொடங்கியதில் இருந்தே அமராவதி அணையின் நீர் இருப்பு அதல பாதாளத்திற்கு சென்றது. இதனால், பொதுமக்களுக்குத் தேவையான குடிநீரை விநியோகம் செய்ய முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன.
இந்நிலையில், அமராவதி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மின் மோட்டார்கள் மற்றும் டீசல் என்ஜின்கள் மூலமாக ஆங்காங்கு தண்ணீர் திருட்டு நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றன. இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் உத்தரவின்பேரில், உடுமலை கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள் தலைமையில் வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை, மின்சாரம், காவல் ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அமராவதி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை திடீர் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில், கொழுமம், கொமரலிங்கம், ருத்ராபாபாளையம் ஆகிய கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் சட்டவிரோதமாக தண்ணீர் திருட்டில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தண்ணீர் உறிஞ்சுவதற்காக பயன்படுத்தப்பட்ட 8 மின் மோட்டார்கள், 9 டீசல் என்ஜின்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 8 விவசாயிகளுக்கு மின் இணைப்பையும் அதிகாரிகள் உடனடியாக துண்டித்தனர்.
தண்ணீர் திருட்டில் ஈடுபட்டதாக 17 விவசாயிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மடத்துக்குளம் பேரூராட்சி கழுகரையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான பொய் வழக்கிலிருந்து விரைவில் மீண்டு வந்து தமிழக ஆட்சிப் பொறுப்...
-
கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார்...
-
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மான்பிடிமங்கலம் சக்திவேல் அவர்களின் மனைவி நித்யா(25) மற்றும் அவர்களது 8 மாத கைக்குழந்தை பவ்யஸ...
-
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை தேஜஸ் ரோட்டரி சங்கம் அமைப்பின் சார்பில் 4 துறைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தத் துறையில் சிறந்த முறையில் ச...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
0 comments:
Post a Comment