Tuesday, April 07, 2015
மதுரை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை (ஏப்.7-ம் தேதி) இந்திரதனுஷ் தடுப்பூசித் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன் விடுத்துள்ள
செய்திக்குறிப்பு: பிறந்தது முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு
அளிக்கப்படும் தடுப்பூசிகளில் ஏதேனும் விடுபட்டிருந்தால், அதை மத்திய
அரசின் இந்திரதனுஷ் திட்டத்தின் மூலம் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரையில் செவ்வாய்க்கிழமை இம்முகாம் நடைபெறும்
இடங்கள்: அருள்தாஸ்புரம், செல்லூர், நரிமேடு, பீபிகுளம், கே.புதூர்,
சாத்தமங்கலம், முனிச்சாலை, பாலரெங்காபுரம், அனுப்பானடி, வில்லாபுரம்.,
சுந்தரராஜபுரம், பைக்காரா, பெத்தானியபுரம், திடீர்நகர், அன்சாரி நகர்,
புட்டுத்தோப்பு, அண்ணாத்தோப்பு.
முகாம் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சத்துணவு
மையங்கள், அரசு, தனியார் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆகியவற்றில்
குழந்தைகளுக்கு ஊசி போடப்படும்.
குழந்தைகளுக்கு போடப்படும் ஊசிகள் விவரம்: குழந்தை
பிறந்தவுடன் பி.சி.ஜி., போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டிருக்கவேண்டும்.
ஒன்றரை மாதத்தில் பெண்டாவேலண்ட்02, போலியோ-2, மூன்றரை மாதத்தில்
பெண்டாவேலண்ட் 3, போலியோ 3, ஒன்பது மாதம் முடிவில் தட்டம்மை, ஜப்பானிஸ்
என்செபலைடிஸ் 1, ஒன்றரை வயதில் ஜப்பானிஸ் என்டிசபலைடிஸ் ஊக்குவிப்பு ஊசி,
ஒன்றரை வயதில் டி.பி.டி. ஊக்குவிப்பு ஊசி, தட்டம்மை ஊக்குவிப்பு ஊசி
அளிக்கப்பட்டிருக்கவேண்டும்.
கர்ப்பிணிகள் ஊசி: கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரணஜன்னி
முதல் தவணை, ஒரு மாதம் கழித்து மீண்டும் ரணஜன்னி இரண்டாவது தவணை, இத்தகைய
ஊசி போடாத கர்ப்பிணிகளுக்கு முகாமில் ஊசிகள் போடப்படும் என்றும் மாநகராட்சி
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
0 comments:
Post a Comment