Friday, April 24, 2015
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை தடை செய்யக் கோரி அப்பகுதி மக்கள் ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்துக் கட்சி மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கே.எம்.சுப்ரமணி தலைமை வகித்தார். ஜி.கே.கேசவன், எம்.சி.பழனிசாமி, எம்.ஆனந்தன், கே.என்.பழனிசாமி, கே.கே.ராசுக்குட்டி, கே.சி.சென்னியப்பன், ஏ.சரவணன், எஸ்.சின்னசாமி, எஸ்.சங்கமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்பகுதி மக்கள் கூறியதாவது: பிரச்னைக்குரிய பனியன் நிறுவனத்திற்கு தடை விதிக்கக் கோரி பலமுறை மாவட்ட ஆட்சியர், விவசாயக் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவற்றில் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இப்பகுதியில் வெளியேறும் சாயக்கழிவு நீரால், விவசாய நிலம், ஆழ்துளை கிணறு, விவசாயத் தோட்டக் கிணறு உள்ளிட்டவை மாசுபட்டு, நஞ்சு உண்டாகி உள்ளது.
இதனால் கால்நடைகள், பொதுமக்கள் குடிநீர் கூட குடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், இப்பிரச்னையால் மக்கள் வேறு பகுதிகளுக்கு குடியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அனைத்து கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரண்டு மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம், இவ்வாறு தெரிவித்தனர்.
இதனால் கால்நடைகள், பொதுமக்கள் குடிநீர் கூட குடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், இப்பிரச்னையால் மக்கள் வேறு பகுதிகளுக்கு குடியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அனைத்து கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரண்டு மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம், இவ்வாறு தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்ட...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட நீர் மேலாண்மை திட்டங்களை, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுத்த...
-
கோவை சிங்கநல்லூர் தொகுதியில் உள்ள நீலிகோணம்பாளையம் பகுதியில் அமைச்சர் ப.மோகன், எம்.எல்.ஏ.,சின்னசாமி ஆகியோர் மேயர் வேட்பாளர் கணபதி ராஜ்குமா...
-
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாம் சனிக்கிழமை சர்வதேச கடற்கரையோர துப்புரவு நாளாக அனுசரிக்கப்படுகிறது . இந்த...
-
ஜெயலலிதாவுக்கு ஆதர வாக தமிழ் திரையுலகினர் சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார்கள். அ.தி.மு.க. பொதுச்செய லாளர் ஜெயலலிதாவுக்கு ச...
0 comments:
Post a Comment