Friday, April 24, 2015
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை தடை செய்யக் கோரி அப்பகுதி மக்கள் ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்துக் கட்சி மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கே.எம்.சுப்ரமணி தலைமை வகித்தார். ஜி.கே.கேசவன், எம்.சி.பழனிசாமி, எம்.ஆனந்தன், கே.என்.பழனிசாமி, கே.கே.ராசுக்குட்டி, கே.சி.சென்னியப்பன், ஏ.சரவணன், எஸ்.சின்னசாமி, எஸ்.சங்கமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்பகுதி மக்கள் கூறியதாவது: பிரச்னைக்குரிய பனியன் நிறுவனத்திற்கு தடை விதிக்கக் கோரி பலமுறை மாவட்ட ஆட்சியர், விவசாயக் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவற்றில் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இப்பகுதியில் வெளியேறும் சாயக்கழிவு நீரால், விவசாய நிலம், ஆழ்துளை கிணறு, விவசாயத் தோட்டக் கிணறு உள்ளிட்டவை மாசுபட்டு, நஞ்சு உண்டாகி உள்ளது.
இதனால் கால்நடைகள், பொதுமக்கள் குடிநீர் கூட குடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், இப்பிரச்னையால் மக்கள் வேறு பகுதிகளுக்கு குடியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அனைத்து கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரண்டு மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம், இவ்வாறு தெரிவித்தனர்.
இதனால் கால்நடைகள், பொதுமக்கள் குடிநீர் கூட குடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், இப்பிரச்னையால் மக்கள் வேறு பகுதிகளுக்கு குடியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அனைத்து கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரண்டு மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம், இவ்வாறு தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment