Friday, April 24, 2015
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை தடை செய்யக் கோரி அப்பகுதி மக்கள் ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்துக் கட்சி மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கே.எம்.சுப்ரமணி தலைமை வகித்தார். ஜி.கே.கேசவன், எம்.சி.பழனிசாமி, எம்.ஆனந்தன், கே.என்.பழனிசாமி, கே.கே.ராசுக்குட்டி, கே.சி.சென்னியப்பன், ஏ.சரவணன், எஸ்.சின்னசாமி, எஸ்.சங்கமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்பகுதி மக்கள் கூறியதாவது: பிரச்னைக்குரிய பனியன் நிறுவனத்திற்கு தடை விதிக்கக் கோரி பலமுறை மாவட்ட ஆட்சியர், விவசாயக் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவற்றில் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இப்பகுதியில் வெளியேறும் சாயக்கழிவு நீரால், விவசாய நிலம், ஆழ்துளை கிணறு, விவசாயத் தோட்டக் கிணறு உள்ளிட்டவை மாசுபட்டு, நஞ்சு உண்டாகி உள்ளது.
இதனால் கால்நடைகள், பொதுமக்கள் குடிநீர் கூட குடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், இப்பிரச்னையால் மக்கள் வேறு பகுதிகளுக்கு குடியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அனைத்து கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரண்டு மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம், இவ்வாறு தெரிவித்தனர்.
இதனால் கால்நடைகள், பொதுமக்கள் குடிநீர் கூட குடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், இப்பிரச்னையால் மக்கள் வேறு பகுதிகளுக்கு குடியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அனைத்து கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரண்டு மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம், இவ்வாறு தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment