Friday, April 24, 2015
திருப்பூர், : மே தினத்தின் 129வது ஆண்டு விழாவை உழைப்பாளிகள் நகரமான திருப்பூரில் பேரெழுச்சியோடு கொண்டாடுவது என்று சிஐடியு, ஏஐடியுசி சங்கங்கள் கூட்டாக முடிவு செய்துள்ளன. திருப்பூர் சிஐடியு அலுவலகத்தில் ஏஐடியுசி, சிஐடியு நிர்வாகிகள் கூட்டம் ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் ஏஐடியுசி தலைவர் ரவி, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் சேகர், ராமசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் உண்ணிகிருஷ்ணன், சிஐடியு பனியன் தொழிற்சங்கத் தலைவர் காமராஜ், பொதுச் செயலாளர் மூர்த்தி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மே தினத்தின் 129வது ஆண்டு விழா நிகழ்ச்சிகளை திருப்பூர் மாவட்டத்தில் ஏஐடியுசி, சிஐடியு தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்துகின்றன. மே 1ம் தேதி திருப்பூர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் காலை நேரத்தில் செங்கொடி ஏற்றி வைத்து மே தின விழா நிகழ்ச்சிகள் துவக்கப்படுகின்றன. அன்று மாலை 4 மணியளவில் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா அருகில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சங்கமித்து மாபெரும் செம்படைப் பேரணி புறப்பட்டு, ரயில்வே மேம்பாலம் வழியாக, குமரன் ரோடு, மாநகராட்சி வழியாக பல்லடம் ரோட்டில் உள்ள அரிசிக்கடை வீதியை அடைகிறது. அரிசிக்கடை வீதியில் மே தினப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் உண்ணிகிருஷ்ணன் தலைமை ஏற்கிறார். ஏஐடியுசி மாவட்டத் தலைவர் சேகர் வரவேற்கிறார். சிஐடியு தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் சுகுமாறன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சின்னச்சாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். திருப்பூர் மாநகரின் உழைக்கும் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், மே தினத்தின் 129வது ஆண்டு விழா நிகழ்ச்சிகளை திருப்பூர் மாவட்டத்தில் ஏஐடியுசி, சிஐடியு தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்துகின்றன. மே 1ம் தேதி திருப்பூர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் காலை நேரத்தில் செங்கொடி ஏற்றி வைத்து மே தின விழா நிகழ்ச்சிகள் துவக்கப்படுகின்றன. அன்று மாலை 4 மணியளவில் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா அருகில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சங்கமித்து மாபெரும் செம்படைப் பேரணி புறப்பட்டு, ரயில்வே மேம்பாலம் வழியாக, குமரன் ரோடு, மாநகராட்சி வழியாக பல்லடம் ரோட்டில் உள்ள அரிசிக்கடை வீதியை அடைகிறது. அரிசிக்கடை வீதியில் மே தினப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் உண்ணிகிருஷ்ணன் தலைமை ஏற்கிறார். ஏஐடியுசி மாவட்டத் தலைவர் சேகர் வரவேற்கிறார். சிஐடியு தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் சுகுமாறன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சின்னச்சாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். திருப்பூர் மாநகரின் உழைக்கும் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
பொள்ளாச்சி பகுதியில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங் கள், ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங் களி...
-
புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்...
-
CANPAL ACTIHITY AINBOF ALL INDIA GENERAL SECRETARY GV.MANINARAN DIRECTED TO ...
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
திருப்பூரில் பனியன் வியாபாரியின் முகத்தில் மிளகாய்பொடி தூவி ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வர...
-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உளளாட்சி தேர்தல் 2020 க்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாநகராட்சி ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் ...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
0 comments:
Post a Comment