Friday, April 24, 2015
திருப்பூர், : மே தினத்தின் 129வது ஆண்டு விழாவை உழைப்பாளிகள் நகரமான திருப்பூரில் பேரெழுச்சியோடு கொண்டாடுவது என்று சிஐடியு, ஏஐடியுசி சங்கங்கள் கூட்டாக முடிவு செய்துள்ளன. திருப்பூர் சிஐடியு அலுவலகத்தில் ஏஐடியுசி, சிஐடியு நிர்வாகிகள் கூட்டம் ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் ஏஐடியுசி தலைவர் ரவி, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் சேகர், ராமசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் உண்ணிகிருஷ்ணன், சிஐடியு பனியன் தொழிற்சங்கத் தலைவர் காமராஜ், பொதுச் செயலாளர் மூர்த்தி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மே தினத்தின் 129வது ஆண்டு விழா நிகழ்ச்சிகளை திருப்பூர் மாவட்டத்தில் ஏஐடியுசி, சிஐடியு தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்துகின்றன. மே 1ம் தேதி திருப்பூர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் காலை நேரத்தில் செங்கொடி ஏற்றி வைத்து மே தின விழா நிகழ்ச்சிகள் துவக்கப்படுகின்றன. அன்று மாலை 4 மணியளவில் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா அருகில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சங்கமித்து மாபெரும் செம்படைப் பேரணி புறப்பட்டு, ரயில்வே மேம்பாலம் வழியாக, குமரன் ரோடு, மாநகராட்சி வழியாக பல்லடம் ரோட்டில் உள்ள அரிசிக்கடை வீதியை அடைகிறது. அரிசிக்கடை வீதியில் மே தினப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் உண்ணிகிருஷ்ணன் தலைமை ஏற்கிறார். ஏஐடியுசி மாவட்டத் தலைவர் சேகர் வரவேற்கிறார். சிஐடியு தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் சுகுமாறன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சின்னச்சாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். திருப்பூர் மாநகரின் உழைக்கும் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், மே தினத்தின் 129வது ஆண்டு விழா நிகழ்ச்சிகளை திருப்பூர் மாவட்டத்தில் ஏஐடியுசி, சிஐடியு தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்துகின்றன. மே 1ம் தேதி திருப்பூர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் காலை நேரத்தில் செங்கொடி ஏற்றி வைத்து மே தின விழா நிகழ்ச்சிகள் துவக்கப்படுகின்றன. அன்று மாலை 4 மணியளவில் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா அருகில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சங்கமித்து மாபெரும் செம்படைப் பேரணி புறப்பட்டு, ரயில்வே மேம்பாலம் வழியாக, குமரன் ரோடு, மாநகராட்சி வழியாக பல்லடம் ரோட்டில் உள்ள அரிசிக்கடை வீதியை அடைகிறது. அரிசிக்கடை வீதியில் மே தினப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் உண்ணிகிருஷ்ணன் தலைமை ஏற்கிறார். ஏஐடியுசி மாவட்டத் தலைவர் சேகர் வரவேற்கிறார். சிஐடியு தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் சுகுமாறன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சின்னச்சாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். திருப்பூர் மாநகரின் உழைக்கும் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
உடுமலை,: உடுமலை துணை மின் நிலையத்தில் நாளை(25ம் தேதி)மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே அந்த மின் நிலையத்துக்குட்பட்ட உடுமலை நகர், பழ...
-
காஷ்மீரில் அமைதி திரும்பஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தேசிய அளவில...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
0 comments:
Post a Comment