Friday, April 24, 2015
திருப்பூர், : மே தினத்தின் 129வது ஆண்டு விழாவை உழைப்பாளிகள் நகரமான திருப்பூரில் பேரெழுச்சியோடு கொண்டாடுவது என்று சிஐடியு, ஏஐடியுசி சங்கங்கள் கூட்டாக முடிவு செய்துள்ளன. திருப்பூர் சிஐடியு அலுவலகத்தில் ஏஐடியுசி, சிஐடியு நிர்வாகிகள் கூட்டம் ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் ஏஐடியுசி தலைவர் ரவி, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் சேகர், ராமசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் உண்ணிகிருஷ்ணன், சிஐடியு பனியன் தொழிற்சங்கத் தலைவர் காமராஜ், பொதுச் செயலாளர் மூர்த்தி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மே தினத்தின் 129வது ஆண்டு விழா நிகழ்ச்சிகளை திருப்பூர் மாவட்டத்தில் ஏஐடியுசி, சிஐடியு தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்துகின்றன. மே 1ம் தேதி திருப்பூர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் காலை நேரத்தில் செங்கொடி ஏற்றி வைத்து மே தின விழா நிகழ்ச்சிகள் துவக்கப்படுகின்றன. அன்று மாலை 4 மணியளவில் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா அருகில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சங்கமித்து மாபெரும் செம்படைப் பேரணி புறப்பட்டு, ரயில்வே மேம்பாலம் வழியாக, குமரன் ரோடு, மாநகராட்சி வழியாக பல்லடம் ரோட்டில் உள்ள அரிசிக்கடை வீதியை அடைகிறது. அரிசிக்கடை வீதியில் மே தினப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் உண்ணிகிருஷ்ணன் தலைமை ஏற்கிறார். ஏஐடியுசி மாவட்டத் தலைவர் சேகர் வரவேற்கிறார். சிஐடியு தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் சுகுமாறன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சின்னச்சாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். திருப்பூர் மாநகரின் உழைக்கும் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், மே தினத்தின் 129வது ஆண்டு விழா நிகழ்ச்சிகளை திருப்பூர் மாவட்டத்தில் ஏஐடியுசி, சிஐடியு தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்துகின்றன. மே 1ம் தேதி திருப்பூர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் காலை நேரத்தில் செங்கொடி ஏற்றி வைத்து மே தின விழா நிகழ்ச்சிகள் துவக்கப்படுகின்றன. அன்று மாலை 4 மணியளவில் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா அருகில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சங்கமித்து மாபெரும் செம்படைப் பேரணி புறப்பட்டு, ரயில்வே மேம்பாலம் வழியாக, குமரன் ரோடு, மாநகராட்சி வழியாக பல்லடம் ரோட்டில் உள்ள அரிசிக்கடை வீதியை அடைகிறது. அரிசிக்கடை வீதியில் மே தினப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் உண்ணிகிருஷ்ணன் தலைமை ஏற்கிறார். ஏஐடியுசி மாவட்டத் தலைவர் சேகர் வரவேற்கிறார். சிஐடியு தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் சுகுமாறன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சின்னச்சாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். திருப்பூர் மாநகரின் உழைக்கும் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment