Friday, April 10, 2015
உடுமலை நகரில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் ஆண்டு பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் தி.சேஷாசலம் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ரா.செல்வராஜ் வரவேற்றார். செயலாளர் கே.ஆறுமுகம் அறிக்கை சமர்ப்பித்தார்.
இதில், உடுமலையில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளால் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இத்திட்டத்தை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். சார்- கருவூல அலுவலகத்தில் ஓய்வூதியர்களுக்கு காத்திருப்பு அறை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2014-இல் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சி.எம்.வேலுச்சாமி, மு.பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிர்வாகிகள் கே.கே.அன்பழகன், எஸ்.ரகோத்தமன், கே.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொ ண்டனர். ஆர்.சுகுமார் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
0 comments:
Post a Comment