Friday, April 10, 2015
காங்கயத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அப்பெண்ணின் கணவர், மாமியார் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர், சக்தி நகரை சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (50). இவரது மகள் அஸ்ரப் நிஷா (21). இவருக்கும் காங்கயம், ராஜாஜி வீதியை சேர்ந்த ஜாபர் அலி என்பவரின் மகன் நசீர் (25) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், வரதட்சிணை கேட்டு நசீர் தனது மனைவியை கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு நசீரின் தாயார் மும்தாஜ் உடந்தையாக இருந்துள்ளதாகவும் தெரிகிறது.
இதனால், மனமுடைந்த அஸ்ரப்நிஷா செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அஸ்ரப்நிஷாவின் தந்தை காங்கயம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் துணைக் கண்காணிப்பாளர் (பொறுப்பு ) பிச்சை, உதவி ஆய்வாளர் சாஸ்தா இந்துசேகரன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட அஸ்ரப்நிஷாவின் கணவர் நசீர், அவரது தாயார் மும்தாஜ் ஆகியோர் காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment