Friday, April 10, 2015
காங்கயத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அப்பெண்ணின் கணவர், மாமியார் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர், சக்தி நகரை சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (50). இவரது மகள் அஸ்ரப் நிஷா (21). இவருக்கும் காங்கயம், ராஜாஜி வீதியை சேர்ந்த ஜாபர் அலி என்பவரின் மகன் நசீர் (25) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், வரதட்சிணை கேட்டு நசீர் தனது மனைவியை கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு நசீரின் தாயார் மும்தாஜ் உடந்தையாக இருந்துள்ளதாகவும் தெரிகிறது.
இதனால், மனமுடைந்த அஸ்ரப்நிஷா செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அஸ்ரப்நிஷாவின் தந்தை காங்கயம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் துணைக் கண்காணிப்பாளர் (பொறுப்பு ) பிச்சை, உதவி ஆய்வாளர் சாஸ்தா இந்துசேகரன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட அஸ்ரப்நிஷாவின் கணவர் நசீர், அவரது தாயார் மும்தாஜ் ஆகியோர் காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment