Friday, April 10, 2015
செலவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தொழில் நிறுவனங்களில் லாபம் அதிகரிக்கும் என இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகர் கே.வி.மகிதர் பேசினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்டக் குழு சார்பில், "தொழில் நிறுவனங்களில் செலவுகளை குறைப்பது எப்படி?' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு திருப்பூர், ஸ்ரீபுரம் அறக்கட்டளை அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு, இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்டத் தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார்.
இதில், தொழில்நுட்ப ஆலோசகர் கே.வி.மகிதர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது:
தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உற்பத்திச் செலவுகள் குறித்த தகவல்கள் தெளிவாகத் தெரிய வேண்டும். தாங்கள் பயன்படுத்தும் அலுவலகப் பொருள்கள், தொழிற்சாலையில் உள்ள கருவிகள் குறித்த தகவல்களும், அவற்றின் மதிப்பும் தெரிந்திருக்க வேண்டும்.
வீணாக எரியும் மின் விளக்குகள், ஆள்கள் இல்லாத அறையில் சுழலும் மின்விசிறிகளை தவிர்க்கும் முறைகளை அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது என்பது கலாசாரம் என்ற விஷயத்தை அவர்களுக்கு விளக்க வேண்டும். லாபம் குறைகிறதே என்கிற கவலை வரும்போது தான் செலவுகள் குறித்த அக்கறை பிறக்கிறது. இந்தச் சூழ்நிலையை ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும்.
விற்பனை, லாபம் குறித்த தகவல்களை நிர்வாகக் குழுவுக்கு தெரிவித்தால் போதும். ஆனால் உற்பத்திச் செலவுகள் குறித்த முழு விவரங்களும் அடிப்படைத் தொழிலாளர்கள் வரை தெரிந்திருக்க வேண்டும். செலவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தொழில் நிறுவனங்களில் லாபம் அதிகரிக்கும் என்றார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில், திருப்பூர் பின்னலாடைத் தொழில் துறையினர் ஏராளமானோர் பங்கேற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...
0 comments:
Post a Comment