Friday, April 10, 2015
செலவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தொழில் நிறுவனங்களில் லாபம் அதிகரிக்கும் என இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகர் கே.வி.மகிதர் பேசினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்டக் குழு சார்பில், "தொழில் நிறுவனங்களில் செலவுகளை குறைப்பது எப்படி?' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு திருப்பூர், ஸ்ரீபுரம் அறக்கட்டளை அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு, இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்டத் தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார்.
இதில், தொழில்நுட்ப ஆலோசகர் கே.வி.மகிதர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது:
தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உற்பத்திச் செலவுகள் குறித்த தகவல்கள் தெளிவாகத் தெரிய வேண்டும். தாங்கள் பயன்படுத்தும் அலுவலகப் பொருள்கள், தொழிற்சாலையில் உள்ள கருவிகள் குறித்த தகவல்களும், அவற்றின் மதிப்பும் தெரிந்திருக்க வேண்டும்.
வீணாக எரியும் மின் விளக்குகள், ஆள்கள் இல்லாத அறையில் சுழலும் மின்விசிறிகளை தவிர்க்கும் முறைகளை அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது என்பது கலாசாரம் என்ற விஷயத்தை அவர்களுக்கு விளக்க வேண்டும். லாபம் குறைகிறதே என்கிற கவலை வரும்போது தான் செலவுகள் குறித்த அக்கறை பிறக்கிறது. இந்தச் சூழ்நிலையை ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும்.
விற்பனை, லாபம் குறித்த தகவல்களை நிர்வாகக் குழுவுக்கு தெரிவித்தால் போதும். ஆனால் உற்பத்திச் செலவுகள் குறித்த முழு விவரங்களும் அடிப்படைத் தொழிலாளர்கள் வரை தெரிந்திருக்க வேண்டும். செலவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தொழில் நிறுவனங்களில் லாபம் அதிகரிக்கும் என்றார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில், திருப்பூர் பின்னலாடைத் தொழில் துறையினர் ஏராளமானோர் பங்கேற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment