Monday, April 20, 2015
சேவூர் அருகே ஆலத்தூர் ஆத்திக்காட்டுப்பாளையத்தில், தனியார் நூற்பாலையை தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
இந்த நூற்பாலை கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்தது. இங்கு, 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், 2012 பிப்ரவரி முதல் எவ்விதக் காரணமும் இன்றி நூற்பாலை மூடப்பட்டது.
இதுகுறித்து தொழிலாளர்களுக்கும், நூற்பாலை நிர்வாகத்துக்கும் இடையே நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, மூடிக்கிடக்கும் நூற்பாலையில் உள்ள இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்காக வெள்ளிக்கிழமை காலையில் வாகனங்கள் வந்துள்ளன. இதையறிந்த தொழிலாளர்கள் திரண்டு வந்து வாகனங்களை வெளியே செல்லவிடாமல் கற்களைப் போட்டுத் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேவூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், வழக்கு முடியும் வரை இயந்திரங்களை எடுத்துச் செல்லக் கூடாது என அறிவுறுத்தினர். இதையடுத்து, வாகனங்களில் ஏற்றப்பட்ட இயந்திரங்கள் இறக்கி வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
கோவை: கோவையில் வாக்களர்களுக்கு பணம் தந்த கட்சித்தொண்டருக்கு அடி உதை கொடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கவுண்டம்பாளையத்தில் பணம் தந்...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. விசைத்தறி தொழிலாளி. இவர் 13 வயதான பள்ளி மாணவியுடன் பழகினார். 2010...
0 comments:
Post a Comment