Monday, April 20, 2015
சேவூர் அருகே ஆலத்தூர் ஆத்திக்காட்டுப்பாளையத்தில், தனியார் நூற்பாலையை தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
இந்த நூற்பாலை கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்தது. இங்கு, 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், 2012 பிப்ரவரி முதல் எவ்விதக் காரணமும் இன்றி நூற்பாலை மூடப்பட்டது.
இதுகுறித்து தொழிலாளர்களுக்கும், நூற்பாலை நிர்வாகத்துக்கும் இடையே நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, மூடிக்கிடக்கும் நூற்பாலையில் உள்ள இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்காக வெள்ளிக்கிழமை காலையில் வாகனங்கள் வந்துள்ளன. இதையறிந்த தொழிலாளர்கள் திரண்டு வந்து வாகனங்களை வெளியே செல்லவிடாமல் கற்களைப் போட்டுத் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேவூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், வழக்கு முடியும் வரை இயந்திரங்களை எடுத்துச் செல்லக் கூடாது என அறிவுறுத்தினர். இதையடுத்து, வாகனங்களில் ஏற்றப்பட்ட இயந்திரங்கள் இறக்கி வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment