Monday, April 20, 2015
சேவூர் அருகே ஆலத்தூர் ஆத்திக்காட்டுப்பாளையத்தில், தனியார் நூற்பாலையை தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
இந்த நூற்பாலை கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்தது. இங்கு, 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், 2012 பிப்ரவரி முதல் எவ்விதக் காரணமும் இன்றி நூற்பாலை மூடப்பட்டது.
இதுகுறித்து தொழிலாளர்களுக்கும், நூற்பாலை நிர்வாகத்துக்கும் இடையே நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, மூடிக்கிடக்கும் நூற்பாலையில் உள்ள இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்காக வெள்ளிக்கிழமை காலையில் வாகனங்கள் வந்துள்ளன. இதையறிந்த தொழிலாளர்கள் திரண்டு வந்து வாகனங்களை வெளியே செல்லவிடாமல் கற்களைப் போட்டுத் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேவூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், வழக்கு முடியும் வரை இயந்திரங்களை எடுத்துச் செல்லக் கூடாது என அறிவுறுத்தினர். இதையடுத்து, வாகனங்களில் ஏற்றப்பட்ட இயந்திரங்கள் இறக்கி வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
0 comments:
Post a Comment