Saturday, September 13, 2014
சென்னை, செப்.13-
சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ரேஷன் அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த மாதத்துக்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்ட முகாம் 13-ந் தேதி இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பொது விநியோக திட்டத்தைச் செயல்படுத்தும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவு துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.
அப்பகுதியை சுற்றி உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் ரேஷன் அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும், பொது விநியோக திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும், தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் தங்களுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தங்கசாலை சிதம்பரனார் சென்னை நடுநிலைப்பள்ளி, ராயபுரம் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பெரம்பூர் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி, அண்ணாநகர் சென்னை உயர்நிலைப்பள்ளி, அம்பத்தூர் சென்னை தொடக்கப்பள்ளி, வில்லிவாக்கம் சமுதாய நலக்கூடம், திருவொற்றியூர் நேரு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ஆவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, போரூர் தி.நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, மைலாப்பூர் பி.எஸ். மேல்நிலைப்பள்ளி, பரங்கிமலை புனித மார்க்ஸ் மேல்நிலைப்பள்ளி, தாம்பரம் ஊராட்சி மன்ற அலுவலகம், திருவஞ்சேரி சைதாப்பேட்டை பாய்ஸ் கிளப் வெங்கடாபுரம், ஆயிரம்விளக்கு சென்னை நடுநிலைப்பள்ளி, சேப்பாக்கம் சென்னை நடுநிலைப்பள்ளி, சோழிங்கநல்லூர் பெரும்பாக்கம் ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம் நடத்தப்படுகிறது.
சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ரேஷன் அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த மாதத்துக்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்ட முகாம் 13-ந் தேதி இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பொது விநியோக திட்டத்தைச் செயல்படுத்தும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவு துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.
அப்பகுதியை சுற்றி உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் ரேஷன் அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும், பொது விநியோக திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும், தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் தங்களுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தங்கசாலை சிதம்பரனார் சென்னை நடுநிலைப்பள்ளி, ராயபுரம் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பெரம்பூர் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி, அண்ணாநகர் சென்னை உயர்நிலைப்பள்ளி, அம்பத்தூர் சென்னை தொடக்கப்பள்ளி, வில்லிவாக்கம் சமுதாய நலக்கூடம், திருவொற்றியூர் நேரு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ஆவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, போரூர் தி.நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, மைலாப்பூர் பி.எஸ். மேல்நிலைப்பள்ளி, பரங்கிமலை புனித மார்க்ஸ் மேல்நிலைப்பள்ளி, தாம்பரம் ஊராட்சி மன்ற அலுவலகம், திருவஞ்சேரி சைதாப்பேட்டை பாய்ஸ் கிளப் வெங்கடாபுரம், ஆயிரம்விளக்கு சென்னை நடுநிலைப்பள்ளி, சேப்பாக்கம் சென்னை நடுநிலைப்பள்ளி, சோழிங்கநல்லூர் பெரும்பாக்கம் ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம் நடத்தப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...

0 comments:
Post a Comment