Saturday, September 13, 2014
உடுமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அமராவதி வன ச்சரகம். இங்கு புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அமராவதி நகர், சாயப்பட்டறை, பெரும்பள்ளம் ஆகிய கிராமங்களில் சிறுத்தை ஒன்று இரவு நேரங்களில் சுற்றி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்னர் அமராவதி நகர் சைனிக் பள்ளி வளாகத்திற்குள் புகுந்த அந்த சிறுத்தை அங்கிருந்த ஆடு ஒன்றை அடித்து சாப்பிட்டுள்ளது. மற்றொரு நாள் அமராவதி வனச்சரகர் மாரியப்பன் வீட்டில் இருந்த நாயை அடித்து சாப்பிட்டுவிட்டது. குறிப்பாக அமராவதி நகர் அரசு மருத்துவமனை மற்றும் சைனிக் பள்ளி அலுவலர் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகவும், அதன் கால் தடங்கள் ஆங்காங்கு பதிந்துள்ளதை பலர் பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, விசாரணை மேற்கொண்ட வனத் துறையினர் சிறுத்தையின் கால் தடங்கள் உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தி வருகின்றனர்.
மேலும் சைனிக் பள்ளி மாணவர்களையும், பொதுமக்களையும் அச்சத்திற்குள்ளாக்கி வரும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்கவும் தலா 5 பேர் கொண்ட 2 குழுக்கள் அமைத்துள்ளனர்.
இதுகுறித்து, அமராவதி வனச்சரக வனவர் செல்வராஜ் வெள்ளிக்கிழமை கூறியது:
இரவு நேரங்களில் 2 குழுக்களாகப் பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம். சிறுத்தையில் கால் தடங்கள் உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தி வருகிறோம். ஓரிரு நாள்களில் கூண்டு வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், சைனிக் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் இரவு நேரங்களில் அறையை விட்டு வெளியே வரக் கூடாது எனவும், மேலும் அருகில் உள்ள கிராம மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளோம். விரைவில் அந்தச் சிறுத்தையைப் பிடித்து விடுவோம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...
0 comments:
Post a Comment