Sunday, May 03, 2015

On Sunday, May 03, 2015 by Unknown in ,    


பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூரில் மருத்துவர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
"மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பணியின்போது ஏற்படும் பிரச்னைகளுக்கு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியே மருத்துவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும். உடனடியாக கைது செய்யக் கூடாது. வழக்கு தொடருவதற்கு முன் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
   இதனால் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். ஆனாலும், பெரும்பாலான மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு மட்டும் செயல்பட்டது.

0 comments: