Sunday, May 03, 2015

On Sunday, May 03, 2015 by Unknown in ,    



திருப்பூர் பனியன் நிறுவனத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான நூல் திருடப்பட்ட வழக்கில் அனுப்பர்பாளையம் போலீஸார் இருவரை சனிக்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் காலேஜ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகர் (41). பனியன் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர். இவரின் நிறுவனத்தில் வேலூர் பள்ளி கொண்டான் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (எ) கமலக்கண்ணன் மேலாளராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு தனது நிறுவனத்தில் நடைபெற்ற வரவு செலவு குறித்து கணக்கை ஞானசேகர் சரிபார்த்துள்ளார்.
அப்போது, பனியன் நூல் இருப்பில் 5 ஆயிரத்து 300 கிலோ குறைந்து இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக நிறுவன மேலாளர் ஆறுமுகத்தை கேட்டபோது, அவருக்கு இந்தத் திருட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ 12 லட்சம். இதுகுறித்து ஞானசேகர் கொடுத்த புகாரின்பேரில், அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பனியன் நிறுவன மேலாளர் கமலக்கண்ணன் (38), உதவியாளர் மேட்டூர் தர்மலிங்கம் (33) ஆகியோரை கைது செய்தனர்

0 comments: