Sunday, May 03, 2015
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான நூல் திருடப்பட்ட வழக்கில் அனுப்பர்பாளையம் போலீஸார் இருவரை சனிக்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் காலேஜ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகர் (41). பனியன் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர். இவரின் நிறுவனத்தில் வேலூர் பள்ளி கொண்டான் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (எ) கமலக்கண்ணன் மேலாளராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு தனது நிறுவனத்தில் நடைபெற்ற வரவு செலவு குறித்து கணக்கை ஞானசேகர் சரிபார்த்துள்ளார்.
அப்போது, பனியன் நூல் இருப்பில் 5 ஆயிரத்து 300 கிலோ குறைந்து இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக நிறுவன மேலாளர் ஆறுமுகத்தை கேட்டபோது, அவருக்கு இந்தத் திருட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ 12 லட்சம். இதுகுறித்து ஞானசேகர் கொடுத்த புகாரின்பேரில், அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பனியன் நிறுவன மேலாளர் கமலக்கண்ணன் (38), உதவியாளர் மேட்டூர் தர்மலிங்கம் (33) ஆகியோரை கைது செய்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
.jpg)
0 comments:
Post a Comment