Sunday, May 03, 2015
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான நூல் திருடப்பட்ட வழக்கில் அனுப்பர்பாளையம் போலீஸார் இருவரை சனிக்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் காலேஜ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகர் (41). பனியன் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர். இவரின் நிறுவனத்தில் வேலூர் பள்ளி கொண்டான் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (எ) கமலக்கண்ணன் மேலாளராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு தனது நிறுவனத்தில் நடைபெற்ற வரவு செலவு குறித்து கணக்கை ஞானசேகர் சரிபார்த்துள்ளார்.
அப்போது, பனியன் நூல் இருப்பில் 5 ஆயிரத்து 300 கிலோ குறைந்து இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக நிறுவன மேலாளர் ஆறுமுகத்தை கேட்டபோது, அவருக்கு இந்தத் திருட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ 12 லட்சம். இதுகுறித்து ஞானசேகர் கொடுத்த புகாரின்பேரில், அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பனியன் நிறுவன மேலாளர் கமலக்கண்ணன் (38), உதவியாளர் மேட்டூர் தர்மலிங்கம் (33) ஆகியோரை கைது செய்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
.jpg)
0 comments:
Post a Comment