Monday, April 20, 2015
வாகன விபத்தில் நஷ்ட ஈடு வழங்காததைத் தொடர்ந்து அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பேருந்தை தாராபுரத்தில் நீதிமன்ற ஊழியர்கள் சனிக்கிழமை ஜப்தி செய்தனர்.
தாராபுரம் அருகே சந்திராபுரத்தை சேர்ந்தவர் ரதேஷ் (26). தாராபுரம், பூளவாடி சாலையிலுள்ள ஹாலோபிளாக் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 22.3.2013 அன்று பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் சந்திராபுரத்தை நோக்கி சென்று கொண்டிருபோது, மதுரையிலிருந்து கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் தாராபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சரவணபெருமாள், தனது தீர்ப்பில், ரதேஷ் குடும்பத்துக்கு ரூ. 8 லட்சம் நஷ்ட ஈடு வழங்குமாறு அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு 11.3.2014 அன்று உத்தரவிட்டார். இந்நிலையில், நஷ்ட ஈடு தொகை வழங்கப்படாததால் ரதேஷின் மனைவி கமலா நிறைவேற்றுதல் மனுத் தாக்கல் செய்தார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி சரவணபெருமாள், அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, நீதிமன்ற ஊழியர்கள் கோவையிலிருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தை சனிக்கிழமை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment