Monday, April 20, 2015
குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ. 2.69 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
உடுமலை வட்டம், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 23 ஊராட்சிகள் உள்ளன. பெதப்பம்பட்டியில் அமைந்துள்ள இந்த ஒன்றிய அலுவலகத்துக்கு புதிதாக கட்டடம் கட்டித் தரவேண்டும் என நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
கோரிக்கையை ஏற்று, தற்போது புதிய கட்டடம் கட்டுவதற்காக தமிழக அரசு ரூ. 2.69 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்நிலையில், புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட திட்ட இயக்குநர் ரூபன் சங்கராஜ் தலைமை வகித்தார். சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், தாராபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்னுச்சாமி, ஒன்றிய ஆணையர் செல்வராஜ், அதிமுக ஒன்றியச் செயலாளர் சுந்தரசாமி, ஒன்றியக் குழு துணைத் தலைவர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment