Thursday, September 18, 2014
உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. 2–ம் மண்டல பாசனத்திற்கு பிரதான கால்வாயில் கடந்த 7–ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனையடுத்து தண்ணீர் திருட்டை தடுக்க வருவாய்துறையினர், பொதுப்பணித்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் உடுமலை அருகே பிரதான கால்வாயில் பூலாங்கிணறு கிளை வாய்க்கால் ஷட்டர் அருகே இருந்து சர்க்கார்புதூர் கிராமத்தை சேர்ந்த கஞ்சிமலைக்கவுண்டர் மற்றும் அவரது மகன்கள் ராஜன், பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு சொந்தமான தோட்டத்திற்கு 4 பைப்லைன் மூலம் தண்ணீர் திருடியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து குழாய்கள் உடனடியாக உடைக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று உடுமலை தாசில்தார் சைபூதின் தலைமையில் உதவி செயற்பொறியாளர் பூபதி, நிலவருவாய் ஆய்வாளர் சிவனேசன், கிராம நிர்வாக அலுவலர் பால்வாசகம், கிராமஉதவியாளர், பி.ஏ.பி. லஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தணிக்கை செய்தனர். மேலும் இதுகுறித்து தளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
[8/31, 12:15 AM] Brabhu Palladam: திருப்பூர் அனுப்பர்பாளையம் பனியன் தொழிலாளி மணிமாறன் என்பவரது கடைசிமகள் ஜெய்வாபாய் பள்ளிபிளஸ் ஒன் மாணவி பி...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...

0 comments:
Post a Comment