Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. 2–ம் மண்டல பாசனத்திற்கு பிரதான கால்வாயில் கடந்த 7–ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனையடுத்து தண்ணீர் திருட்டை தடுக்க வருவாய்துறையினர், பொதுப்பணித்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் உடுமலை அருகே பிரதான கால்வாயில் பூலாங்கிணறு கிளை வாய்க்கால் ஷட்டர் அருகே இருந்து சர்க்கார்புதூர் கிராமத்தை சேர்ந்த கஞ்சிமலைக்கவுண்டர் மற்றும் அவரது மகன்கள் ராஜன், பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு சொந்தமான தோட்டத்திற்கு 4 பைப்லைன் மூலம் தண்ணீர் திருடியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து குழாய்கள் உடனடியாக உடைக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று உடுமலை தாசில்தார் சைபூதின் தலைமையில் உதவி செயற்பொறியாளர் பூபதி, நிலவருவாய் ஆய்வாளர் சிவனேசன், கிராம நிர்வாக அலுவலர் பால்வாசகம், கிராமஉதவியாளர், பி.ஏ.பி. லஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தணிக்கை செய்தனர். மேலும் இதுகுறித்து தளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

0 comments: