Thursday, September 18, 2014
உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. 2–ம் மண்டல பாசனத்திற்கு பிரதான கால்வாயில் கடந்த 7–ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனையடுத்து தண்ணீர் திருட்டை தடுக்க வருவாய்துறையினர், பொதுப்பணித்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் உடுமலை அருகே பிரதான கால்வாயில் பூலாங்கிணறு கிளை வாய்க்கால் ஷட்டர் அருகே இருந்து சர்க்கார்புதூர் கிராமத்தை சேர்ந்த கஞ்சிமலைக்கவுண்டர் மற்றும் அவரது மகன்கள் ராஜன், பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு சொந்தமான தோட்டத்திற்கு 4 பைப்லைன் மூலம் தண்ணீர் திருடியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து குழாய்கள் உடனடியாக உடைக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று உடுமலை தாசில்தார் சைபூதின் தலைமையில் உதவி செயற்பொறியாளர் பூபதி, நிலவருவாய் ஆய்வாளர் சிவனேசன், கிராம நிர்வாக அலுவலர் பால்வாசகம், கிராமஉதவியாளர், பி.ஏ.பி. லஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தணிக்கை செய்தனர். மேலும் இதுகுறித்து தளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
0 comments:
Post a Comment