Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழையினால் வெள்ளபெருக்கு ஏற்பட்டு அதிக சேதம் உண்டானது. அதனால் லட்சக்கணக்கான மக்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். இதை தொடர்ந்து காஷ்மீர் வெள்ள நிவாரணத்திற்கு நிதி வழங்கும்படி பிரதமர் மோடி இந்திய மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். இதை தொடர்ந்து காங்கயம் ஸ்ரீராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் காங்கயம் வாரச்சந்தை மற்றும் மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்களிடம் நிதி திரட்டினர். இதில் பள்ளியின் வரலாறு ஆசிரியை ஏ.சின்னம்மாள் தலைமையில் ஆசிரியர்கள் யசோதா, சிவகுருநாதன் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

0 comments: