Thursday, September 18, 2014
அண்ணா பிறந்தநாளையொட்டி நடந்த சைக்கிள் போட்டியில் திருவள்ளுவர் அரசுப்பள்ளி மாணவ–மாணவிகள் பரிசுகளை பெற்றனர்.
அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் பிரிவு சார்பில் முன்னாள் முதல்–அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 106–வது பிறந்தநாளை முன்னிட்டு 2014–2015–ம் ஆண்டிற்கான சைக்கிள் போட்டி 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
போட்டிக்கு அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். சைக்கிள் போட்டியை தொழில் அதிபர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் இராமலிங்கம் வரவேற்று பேசினார். போட்டியில் 13, 15, 17 வயதிற்குட்பட்ட மாணவர்களும், 13, 15, 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் உள்பட 300–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றவர்கள்
இதில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளின் பெயர் வருமாறு:–
15 கிலோமீட்டர் தூரத்திற்கான 13 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் பெரியாயிபாளையம், திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சந்தோஷ்குமார் முதல் இடத்தையும், சூரியபிரகாஷ் 2–ம் இடத்தையும், ஜெயக்குமார் 3–ம் இடத்தையும் பிடித்தனர். 20 கிலோ மீட்டர் தூரத்திற்கான 15 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களான ஆகாஷ் முதலிடத்தையும், மணிகண்டன் 2–ம் இடத்தையும், கார்த்திக் 3–ம் இடத்தையும் பெற்றனர். 20 கிலோ மீட்டர் தூரத்திற்கான 17 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் நவீன்குமார் முதல் இடத்தையும், திருப்பூர் சரஸ்வதிகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் நவநீதகிருஷ்ணன் 2–ம் இடத்தையும், திருப்பூர் சின்னச்சாமியம்மாள் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் கார்த்திகேயன் 3–ம் இடத்தையும் பிடித்தனர்.
மாணவிகள்
10 கிலோமீட்டர் தூரத்திற்கான 13 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான பிரிவில் பெரியாயிபாளையம், திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளான சவும்யா, சபீனா, தாரணி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். 15 கிலோமீட்டர் தூரத்திற்கான 15 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கிருத்திகா முதல் இடத்தையும், மைக்ரோகிட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நிதர்ஷினி 2–ம் இடத்தையும், திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கிருத்திகா 3–ம் இடத்தையும் பிடித்தனர். 15 கிலோமீட்டர் தூரத்திற்கான 17 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் பெரியாயிபாளையம், திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளான ரம்யா, சாந்தி, பிரியதர்ஷினி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.
பரிசு
இதைதொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் முன்னாள் சேர்மன் கிருஷ்ணன் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசும், முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு தகுதிச்சான்றிதழ்களையும் வழங்கினார். முடிவில் மாவட்ட கூடைப்பந்து பயிற்றுனர் பிரபு நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
0 comments:
Post a Comment