Thursday, September 18, 2014
திருப்பூர் பகுதியில் வழிபறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேரை 15.வேலம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
வழிபறி கொள்ளை
திருப்பூரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் பெரியார் காலனி பகுதியில் பிரிண்டிங் பட்டறை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர் ராஜேஸ் கண்ணாவுடன் பணம் வசூல் செய்வதற்காக 15.வேலம்பாளையம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சம்பத்குமார் மற்றும் ராஜேஸ் கண்ணா ஆகியோரை வழிமறித்து அரிவாளை காட்டி பணத்தை கொடுக்கும் படி மிரட்டி உள்ளனர். மேலும் சம்பத்குமாரிடம் இருந்த ரூ.500–ஐயும், செல்போனையும் பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓட முயன்ற போது அக்கம்பக்கத்தினர் கொள்ளையர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் இது குறித்து உடனடியாக 15.வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
5 பேர் கைது
விசாரணையில் அவர்கள், திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த அரசு என்பவரின் மகன் வினோத்(வயது 23), கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கெவின் பிரமீஸ்(38), போயம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆதிராஜ் (25), பி.என்.ரோடு பகுதியை சேர்ந்த சர்புதீன்(26), வளையங்காடு பகுதியை சேர்ந்த பாலகணேஷ்(26) என்பதும் தெரியவந்தது. இவர்கள் ஏற்கனவே அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மொபைல் மற்றும் கிரிக்கெட் மட்டை திருடிய வழக்கிலும், திருப்பூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தொடர் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது அனுப்பர்பாளையம், வேலம்பாளையம் மற்றும் சென்ரல் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதன்பேரில் நேற்று முன்தினம் இவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment