Thursday, September 18, 2014
கண்டலேறு அணையில் நீர் மட்டம் குறைந்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது.
நதி நீர் பங்கீட்டு திட்டம்கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி கடந்த மாதம் 3– ந் தேதி முதல் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடக்கத்தில் வினாடிக்கு 100 கனஅடியாக வந்தது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டது. சராசரியாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. நேற்று மாலை தண்ணீர் மட்டம் 23.62 அடியாக பதிவானது.
ஏரிக்கு வினாடிக்கு 237 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதில் கிருஷ்ணா நதி நீர் 112 கனஅடியாகவும், மழை நீர் 125 அடியாக ஆக மொத்தம் 237 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஏரியில் 658 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
தண்ணீர் நிறுத்தம்கடந்த மாதம் 3–ந் தேதி தண்ணீர் மட்டம் 17.22 அடியாகவும், 76 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும் தான் இருப்பு இருந்தது என்பது குறிப்பிடதக்கது. கடந்த மாதம் 3–ந் தேதியில் இருந்து நேற்று மாலை வரை 1.572 டி.எம்.சி. தண்ணீர் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வந்துள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 461 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் கண்டலேறு அணையில் தண்ணீர் மட்டம் குறைந்து வருவதால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடுவது நேற்று முன்தினம் மாலை முதல் நிறுத்தப்பட்டது.
இதனால் சென்னையில் குடிநீர் வினியோகிப்பதில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
நதி நீர் பங்கீட்டு திட்டம்கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி கடந்த மாதம் 3– ந் தேதி முதல் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடக்கத்தில் வினாடிக்கு 100 கனஅடியாக வந்தது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டது. சராசரியாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. நேற்று மாலை தண்ணீர் மட்டம் 23.62 அடியாக பதிவானது.
ஏரிக்கு வினாடிக்கு 237 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதில் கிருஷ்ணா நதி நீர் 112 கனஅடியாகவும், மழை நீர் 125 அடியாக ஆக மொத்தம் 237 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஏரியில் 658 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
தண்ணீர் நிறுத்தம்கடந்த மாதம் 3–ந் தேதி தண்ணீர் மட்டம் 17.22 அடியாகவும், 76 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும் தான் இருப்பு இருந்தது என்பது குறிப்பிடதக்கது. கடந்த மாதம் 3–ந் தேதியில் இருந்து நேற்று மாலை வரை 1.572 டி.எம்.சி. தண்ணீர் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வந்துள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 461 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் கண்டலேறு அணையில் தண்ணீர் மட்டம் குறைந்து வருவதால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடுவது நேற்று முன்தினம் மாலை முதல் நிறுத்தப்பட்டது.
இதனால் சென்னையில் குடிநீர் வினியோகிப்பதில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment