Thursday, September 18, 2014
ஊத்துக்கோட்டை அருகே கோவிலில் இருந்த கோபுர கலசங்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
கோபுர கலசங்கள் திருட்டு
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரிட்டிவாக்கம் கிராம எல்லையில் ஆரணி ஆற்றங்கரையில் குமாரலிங்கேஸ்வரர் உடனுறை ராஜேஸ்வரி கோவில் உள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலில் ரமேஷ் என்பவர் பூசாரியாக உள்ளார். ஒரு கால பூஜை நடைபெறும் இந்த கோவிலை தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசித்து வந்தனர். கோவில் கோபுரங்களில் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட 2 பஞ்சலோக கலசங்கள் இருந்தன. இந்த நிலையில் பூசாரி சுரேஷ் நேற்று காலை கோவிலை திறக்க சென்றார்.
அப்போது கோபுரங்கள் மீது இருந்த 5 அடி உயரம் மற்றும் 3 அடி உயரம் கொண்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள 2 பஞ்சலோக கலசங்களை காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுள்ளனர்.
போலீசில் புகார்
இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி சுரேஷ் இது குறித்து ஊர் பெரிவர்களிடம் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து பென்னாலூர்பேட்டை போலீல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு இதே கோவிலில் மர்ம நபர்கள் புகுந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள டேப் ரிக்கார்டர் திருடிச் சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
0 comments:
Post a Comment