Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 36). இவர் கடம்பத்தூர் பஜார் பகுதியில் தள்ளுவண்டியில் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் முத்துராஜின் கடைக்கு வந்த கடம்பத்தூரை சேர்ந்த தன்ராஜ் (37) என்பவர் தனக்கு பானிபூரியை ஓசியில் தருமாறு கேட்டார். அதற்கு முத்துராஜ் மறுத்து விட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த அவர் முத்துராஜை தாக்கி கடையில் உள்ள பொருட்களை கீழே கொட்டி நாசம் செய்ததாக தெரிகிறது. இது குறித்து முத்துராஜ் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தன்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

0 comments: