Showing posts with label திருவள்ளூர். Show all posts
Showing posts with label திருவள்ளூர். Show all posts
Thursday, September 18, 2014
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 36). இவர் கடம்பத்தூர் பஜார் பகுதியில் தள்ளுவண்டியில் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் முத்துராஜின் கடைக்கு வந்த கடம்பத்தூரை சேர்ந்த தன்ராஜ் (37) என்பவர் தனக்கு பானிபூரியை ஓசியில் தருமாறு கேட்டார். அதற்கு முத்துராஜ் மறுத்து விட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த அவர் முத்துராஜை தாக்கி கடையில் உள்ள பொருட்களை கீழே கொட்டி நாசம் செய்ததாக தெரிகிறது. இது குறித்து முத்துராஜ் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தன்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை அருகே கோவிலில் இருந்த கோபுர கலசங்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
கோபுர கலசங்கள் திருட்டு
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரிட்டிவாக்கம் கிராம எல்லையில் ஆரணி ஆற்றங்கரையில் குமாரலிங்கேஸ்வரர் உடனுறை ராஜேஸ்வரி கோவில் உள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலில் ரமேஷ் என்பவர் பூசாரியாக உள்ளார். ஒரு கால பூஜை நடைபெறும் இந்த கோவிலை தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசித்து வந்தனர். கோவில் கோபுரங்களில் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட 2 பஞ்சலோக கலசங்கள் இருந்தன. இந்த நிலையில் பூசாரி சுரேஷ் நேற்று காலை கோவிலை திறக்க சென்றார்.
அப்போது கோபுரங்கள் மீது இருந்த 5 அடி உயரம் மற்றும் 3 அடி உயரம் கொண்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள 2 பஞ்சலோக கலசங்களை காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுள்ளனர்.
போலீசில் புகார்
இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி சுரேஷ் இது குறித்து ஊர் பெரிவர்களிடம் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து பென்னாலூர்பேட்டை போலீல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு இதே கோவிலில் மர்ம நபர்கள் புகுந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள டேப் ரிக்கார்டர் திருடிச் சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டலேறு அணையில் நீர் மட்டம் குறைந்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது.
நதி நீர் பங்கீட்டு திட்டம்கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி கடந்த மாதம் 3– ந் தேதி முதல் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடக்கத்தில் வினாடிக்கு 100 கனஅடியாக வந்தது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டது. சராசரியாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. நேற்று மாலை தண்ணீர் மட்டம் 23.62 அடியாக பதிவானது.
ஏரிக்கு வினாடிக்கு 237 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதில் கிருஷ்ணா நதி நீர் 112 கனஅடியாகவும், மழை நீர் 125 அடியாக ஆக மொத்தம் 237 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஏரியில் 658 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
தண்ணீர் நிறுத்தம்கடந்த மாதம் 3–ந் தேதி தண்ணீர் மட்டம் 17.22 அடியாகவும், 76 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும் தான் இருப்பு இருந்தது என்பது குறிப்பிடதக்கது. கடந்த மாதம் 3–ந் தேதியில் இருந்து நேற்று மாலை வரை 1.572 டி.எம்.சி. தண்ணீர் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வந்துள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 461 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் கண்டலேறு அணையில் தண்ணீர் மட்டம் குறைந்து வருவதால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடுவது நேற்று முன்தினம் மாலை முதல் நிறுத்தப்பட்டது.
இதனால் சென்னையில் குடிநீர் வினியோகிப்பதில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
நதி நீர் பங்கீட்டு திட்டம்கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி கடந்த மாதம் 3– ந் தேதி முதல் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடக்கத்தில் வினாடிக்கு 100 கனஅடியாக வந்தது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டது. சராசரியாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. நேற்று மாலை தண்ணீர் மட்டம் 23.62 அடியாக பதிவானது.
ஏரிக்கு வினாடிக்கு 237 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதில் கிருஷ்ணா நதி நீர் 112 கனஅடியாகவும், மழை நீர் 125 அடியாக ஆக மொத்தம் 237 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஏரியில் 658 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
தண்ணீர் நிறுத்தம்கடந்த மாதம் 3–ந் தேதி தண்ணீர் மட்டம் 17.22 அடியாகவும், 76 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும் தான் இருப்பு இருந்தது என்பது குறிப்பிடதக்கது. கடந்த மாதம் 3–ந் தேதியில் இருந்து நேற்று மாலை வரை 1.572 டி.எம்.சி. தண்ணீர் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வந்துள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 461 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் கண்டலேறு அணையில் தண்ணீர் மட்டம் குறைந்து வருவதால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடுவது நேற்று முன்தினம் மாலை முதல் நிறுத்தப்பட்டது.
இதனால் சென்னையில் குடிநீர் வினியோகிப்பதில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...